New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/07/MNqzQGmQvEjm0zBUqYnu.jpg)
கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணி புரியும் புஷ்பராஜ் என்பவர் தாராபுரத்தில் இருந்து கோவை திரும்பிக் கொண்டு இருந்தார். சிங்காநல்லூர் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது அவர் ஆட்டோ ஒன்றை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆட்டோவில் இருந்த முகமது ஆசிக் என்பவரும் அவரது குடும்பத்தினரும் புஷ்பராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் புஷ்பராஜ் காரை எடுத்துக் கொண்டு குளத்தேரி பங்கிற்கு வந்து உள்ளார். அவரை ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்த முகமது ஆசிக் மற்றும் குடும்பத்தினர் பெட்ரோல் பங்கிற்கு வந்து புஷ்பராஜை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
மேலும் அவரது காரையும் சேதப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் புஷ்பராஜிற்கு நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் முகமது ஆசிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: ஆட்டோவை முந்திய பெட்ரோல் பங்க் ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சி#Coimbatore | #CCTV pic.twitter.com/Or6iJmgb1M
— Indian Express Tamil (@IeTamil) February 7, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.