New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/05/wild-elephant-2025-07-05-12-47-01.jpg)
Coimbatore
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உணவு தேடி விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Coimbatore
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் யானைகள், விவசாய நிலங்களையும், மக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பொம்மனம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் நள்ளிரவில் ஒற்றை யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, வனவிலங்குகள் உணவு தேடி கிராமங்களுக்குள் நுழையத் தொடங்கின. பின்னர் பருவமழையால் வனப்பகுதியின் வறட்சி நிலை மாறிய போதிலும், யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளிலேயே முகாமிட்டுள்ளன. இதுவே தற்போது யானைகள் தொடர்ந்து கிராமங்களுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கோவை, பொம்மனம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் நள்ளிரவில் ஒற்றை யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்#coimbatore pic.twitter.com/TBdrllR6Cp
— Indian Express Tamil (@IeTamil) July 5, 2025
வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், கால்நடைத் தீவனங்கள், விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் என அனைத்தையும் தின்று சேதப்படுத்தி வருகின்றன.
மனிதர்களின் உணவுப் பொருட்களை ஒருமுறை சுவைத்ததால், யானைகள் தொடர்ந்து உணவு தேடி விவசாயத் தோட்டங்களுக்கு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் அப்பகுதி விவசாயிகள், யானைகள் வராமல் தடுக்க தமிழக அரசு மற்றும் வனத்துறையினருக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.