New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/12/cbe-cctv-2025-07-12-13-53-53.jpg)
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவையின் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தற்போது துடியலூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டான சாய் நகர், வி.கே.எல் நகர், மீனாட்சி கார்டன், வன்னி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் காட்டுப் பன்றிகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர் வழித்தடங்கள் வழியாக வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுப் பன்றிகள், சின்னவேடம்பட்டி ராஜவாய்க்கால் வழியாக 14-வது வார்டு பகுதிக்குள் நுழைந்துள்ளன.
இது குறித்து ஏற்கனவே கோவை மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல், மாவட்ட வன அலுவலரிடம் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 4 மணியளவில் 7-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் சாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். pic.twitter.com/jCrmBotYs0
— Indian Express Tamil (@IeTamil) July 12, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.