New Update
/indian-express-tamil/media/media_files/FgE1YbsnGM5qDuiP2Gb8.jpg)
Coimbatore
Coimbatore
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கண்டும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் மலையை ஒட்டி உள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் படையெடுக்க துவங்கியது.
இதைத் தொடர்ந்து பருவமழை பெய்ததால் வறட்சி நிலை மாறியது. இருந்த போதும் விளை நிலங்களில் உள்ள பயிர்கள் மற்றும் வீடுகளுக்குள் இருக்கும் உணவுப் பொருட்களை ருசித்து பழகிய யானைகள் வனப் பகுதிகளுக்குள் செல்லாமல் மலை அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
வனத் துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலத்திற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை, துடியலூர் அடுத்த வடவள்ளி- பன்னிமடை சாலையில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் சாலையை கடந்து சென்றது.
கோவை, துடியலூர் அடுத்த வடவள்ளி - பன்னிமடை சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்து செல்லும் யானை கூட்டம்#Coimbatore pic.twitter.com/MCp4QgK06b
— Indian Express Tamil (@IeTamil) August 29, 2024
இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அதற்கு வழிவிட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்து செல்லும் வரை அச்சத்துடன் காத்திருக்கும் வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.