New Update
/indian-express-tamil/media/media_files/FIj1Va5iLWMSKb9KpBv8.jpg)
Coimbatore
கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
Coimbatore
தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை காம்பவுண்ட் சுவரை இடித்து கொண்டு வெளியே செல்லும் வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானையால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டு வருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவரை காட்டு யானை ஒன்று தாக்கியதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. மேலும், அதே பகுதியில் யானையை விரட்ட முற்பட்ட இளைஞர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திப்பாளையம் பகுதியில் வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை, காம்பவுண்ட் சுவரை இடித்து கொண்டு சென்ற வீடியோ#Coimbatore pic.twitter.com/rp7lCFOmLE
— Indian Express Tamil (@IeTamil) July 31, 2024
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திப் பாளையம் பகுதியில் நேற்றிரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ஊரை சுற்றி உலா வந்தது.
அப்போது ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த யானை வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி செல்ல முற்பட்டபோது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.