New Update
![Coimbatore](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Gq6RySPo3Q4zb3CxwiOS.jpg)
Coimbatore
Coimbatore
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டியுடன் காட்டு யானை புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது 24 வீரபாண்டி கிராமம். அப்பகுதியில் குட்டிகளுடன் திடீரென காட்டு யானைக் கூட்டம் புகுந்தது.
யானைகளை பார்த்த அப்பகுதி மக்கள், திரண்டு யானையை விரட்ட பயங்கர சத்தம் எழுப்பினர். இதனால் யானைகள் அலறி அங்குமிங்கமாக ஓடத் தொடங்கியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Video: தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் குட்டியுடன் புகுந்த காட்டு யானைக் கூட்டம்#Coimbatore pic.twitter.com/9KMXkkMpj7
— Indian Express Tamil (@IeTamil) September 29, 2023
இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.