New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-06T160407.026.jpg)
குட்டி நாகப் பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டார் துரிதமாக செயல்பட்டு ஒரு பக்கெட்டை கொண்டு அடைத்தனர்.
கோவையில் வீட்டிற்குள் நுழைந்த குட்டி நகத்தை பெண் பாம்பு பிடி வீராங்கனை லாவகமாக பிடித்தார்.
குட்டி நாகப் பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டார் துரிதமாக செயல்பட்டு ஒரு பக்கெட்டை கொண்டு அடைத்தனர்.
கோவை சங்கனூர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு வீட்டிற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டார் துரிதமாக செயல்பட்டு ஒரு பக்கெட்டை கொண்டு பாம்பை அடைத்தனர்.
பின்னர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற ஜீவ சாந்தி அறக்கட்டளையை சேர்ந்த பெண் பாம்பு பிடி வீராங்கனையான உமா பாம்பிடம் பேசிக்கொண்டே லாவகமாக பாம்பை பிடித்தார். பின்னர் அதனை எடுத்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அந்த குட்டி நாக பாம்பை வனப்பகுதிக்குற்குள் விட்டனர்.
#Video || வீட்டிற்குள் நுழைந்த குட்டி நாகம்… லாவகமாக பிடித்த பெண் பாம்பு பிடி வீராங்கனை!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #Cobra | #Snake | 📹 @rahman14331 pic.twitter.com/eLmF0co4ly
— Indian Express Tamil (@IeTamil) August 6, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.