Advertisment

கோல்ட் பிளே மும்பை இசை நிகழ்ச்சி... ஒரு டிக்கெட் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை: எச்சரிக்கை கொடுத்த புக்மைஷோ; எல்லை மீறிய தளங்கள்

ஜனவரி 2025-ல் நடைபெற உள்ள மும்பை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை புக்மைஷோ ஓபன் செய்ததால் பிரிட்டிஷ் இசைக்குழுவான 'கோல்ட் பிளே' ஞாயிற்றுக்கிழமை முழுதும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

author-image
WebDesk
New Update
Coldplay Mumbai concert tickets listed for Rs 3 lakh on reselling platforms despite BookMyShow fraud warning Tamil News

புக்மைஷோ எச்சரித்த பிறகும், அதிகாரப்பூர்வமற்ற டிக்கெட்டுகளை சில தளங்கள் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்ட நிலையில், ​​ரசிகர்கள் குழம்பினர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு இயங்கி வரும் பிரிட்டிஷ் இசைக்குழு தான் ’கோல்ட் பிளே' (ColdPlay)’. இந்த இசைக்குழுவில் பாடகர் கிறிஸ் மார்டின், கிடார் கலைஞர் ஜானி பக்லேண்ட் மற்றும் இசைக் கலைஞர்களான கை பெர்ரிமேன், டிரம்ஸ் வாசிக்கும் வில் சாம்பியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Coldplay Mumbai concert tickets listed for Rs 3 lakh on reselling platforms despite BookMyShow’s fraud warning

இந்நிலையில், ‘கோல்ட் பிளே’ இசைக்குழு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், அடுத்த ஆண்டு ஜனவரி 18, 19 மற்றும் 21 ஆம் தேதி ஆகிய தேதிகளில் மும்பையின் டி.ஒய்.மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது. இதனையொட்டி, இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (செப். 22) நடைபெற்றது. 

இந்த நிலையில், ஜனவரி 2025-ல் நடைபெற உள்ள மும்பை இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை புக்மைஷோ ஓபன் செய்ததால்  பிரிட்டிஷ் இசைக்குழுவான 'கோல்ட் பிளே' ஞாயிற்றுக்கிழமை முழுதும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த நிகழ்ச்சி குறித்து 2, 00,00,00 பேர் கூகுளில் தேடியுள்ளனர். 

புக்மைஷோ எச்சரித்த பிறகும், அதிகாரப்பூர்வமற்ற டிக்கெட்டுகளை சில தளங்கள் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்ட நிலையில், ​​ரசிகர்கள் குழம்பினர். தவிர, இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விஜய் நரேன் என்ற எக்ஸ் தள பயனர், அதிகாரப்பூர்வமற்ற டிக்கெட் தளங்களில் நடைபெறும் டிக்கெட் மோசடியை சுட்டிக்காட்டினார். மறுவிற்பனை தளமான வயாகோகோ,  'கோல்ட் பிளே' இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தது. 

புக்மைஷோ மற்றும் புக் மைஷோலைவ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ கைப்பிடிகள், அதிகாரப்பூர்வமற்ற டிக்கெட் தளங்களில் ஆன்லைன் டிக்கெட் மோசடிகளைப் பற்றி நிகழ்ச்சிக்கு செல்பவர்களை எச்சரிக்கும் அறிக்கையைப் பகிர்ந்தது.

அந்த அறிக்கையில் “டிக்கெட் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! இந்தியாவில் கோல்ட்ப்ளேயின் மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் வேர்ல்ட் டூர் 2025க்கான போலி டிக்கெட்டுகளை விற்கும் அங்கீகரிக்கப்படாத தளங்களுக்கு இரையாகிவிடாதீர்கள்! அதிகாரப்பூர்வ விற்பனைக்கு முன்னும் பின்னும் இந்தியாவில் கோல்ட்ப்ளேயின் மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் வேர்ல்ட் டூர் 2025க்கான டிக்கெட்டுகளை அங்கீகரிக்கப்படாத இயங்குதளங்கள் பட்டியலிடுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த டிக்கெட்டுகள் செல்லாது” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. “டிக்கெட் ஸ்கால்பிங் இந்தியாவில் சட்டவிரோதமானது மற்றும் சட்டத்தால் தண்டிக்கப்படும். தயவு செய்து இதற்கு இரையாகாதீர்கள் ஏனெனில் நீங்கள் போலி டிக்கெட்டுகளை வாங்குவீர்கள். மோசடிகளைத் தவிர்க்கவும்! டிக்கெட் விற்பனைக்கான ஒரே அதிகாரப்பூர்வ தளம் புக்மைஷோ தான்” என்று கூறப்பட்டுள்ளது.

புக்மைஷோ இணையதளத்தின்படி, ஒரு டிக்கெட் விலை ரூ.2,500 முதல் ரூ.12,500 வரை இருக்கும், லவுஞ்ச் பகுதிக்கு ரூ.35,000 என நிர்ணயித்து இருந்தது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Google Viral Trending Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment