பூண்டி ஆண்டவர் கோவிலில் பூஜை பொருட்களை சூறையாடிய காட்டு யானை: வைரல் வீடியோ

தென் கைலாயம் என்று பக்தர்கள் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் செல்ல வேண்டும்.

தென் கைலாயம் என்று பக்தர்கள் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் செல்ல வேண்டும்.

author-image
WebDesk
New Update
elephant drinking

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள பூண்டி ஆண்டவர் கோவிலில், பூஜை கடைகளை காட்டு யானை சூறையாடிய செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. தென் கைலாயம் என்று பக்தர்கள் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் செல்ல வேண்டும்.

இந்த மலைப் பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவைகளை கடந்து சென்றால் தான் 7 -வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும். மிகவும் கரடு, முரடானதாக இருக்கும் இந்த மலைப் பாதையில் ஏற பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள்.

கோவை மாவட்டம் அல்லாமல் சென்னை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள், முதியவர்கள் என பலர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாதத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லாததால், அடிவார பகுதியில் அமைந்து உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். அந்தக் கோவில் வளாகத்தில் சுற்றி பூஜை கடைகள், பொம்மை கடைகள் போன்றவை நடத்தி வருகின்றன.

Advertisment
Advertisements

இந்த கடைகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையில், இன்று, கோவில் வளாகத்திற்கு வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று அங்கு இருந்த பூஜை கடைக்குள் புகுந்ததால் வியாபாரிகள் ஆலய அடித்து ஓட்டம் பிடித்தனர். அங்கு இருந்த பூஜை கடைகள், பொம்மை கடைகளை சூறையாடியது.  இதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Elephant Attack

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: