கோவையில் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்;டார்ச்லைட் அடித்து விரட்டிய விவசாயிகள்

கோவை காரமடை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானை கூட்டத்தை டார்ச்லை அடித்து விரட்ட முயன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

கோவை காரமடை அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானை கூட்டத்தை டார்ச்லை அடித்து விரட்ட முயன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
elephant

விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானை கூட்டம்

கோவை மாவட்டம் காரமடை அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகளை டார்ச்லைட் அடித்து விவசாயிகள் விரட்ட முயன்ற விடியோ வெளியாகி உள்ளது. 

Advertisment

காரமடையை அடுத்துள்ள மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப்பகுதியில் கடந்த பல நாட்களாக இரு குட்டிகளுடன் கூடிய 6 காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. இந்த காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதிக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் கட்டாஞ்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன.

மேலும் தொடர்ந்து இரவு நேரங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் இரவு நேரத்தில் தோட்டத்திற்கு காவலுக்கு வரும் பணியாளர்கள் வேலைக்கு வர தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ்(65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இரு குட்டிகளுடன் கூடிய 6 காட்டு யானைகள் நுழைய முயன்றன. 

Advertisment
Advertisements

இதனையடுத்து விவசாயிகள் ஒன்றிணைந்து டார்ச் லைட் உதவியுடன் அவற்றை விரட்ட முற்பட்டுள்ளனர். அங்கிருந்து நகராமல் இருந்த காட்டு யானைகள் குறித்து வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானைகளை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பேசிய விவசாயிகள் தொடர்ந்து எங்களது பகுதியில் முகாமிட்டுள்ள இரு குட்டிகளுடன் கூடிய 6 காட்டு யானைகளும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது.

மேலும் இரவு நேரங்களில் உலா வருவதால் தோட்ட காவலுக்கு வரும் பணியாளர்கள் கூட வேலைக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

இந்த யானைகளை விரட்ட முற்பட்டாலும் மீண்டும் எங்களை தாக்க வருகிறது. இதனால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இந்த காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Elephant Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: