கோவையில் ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் சிக்கின; வன உயிரின பாதுகாப்பு குழுவுக்கு பொதுமக்கள் பாராட்டு

கோவையில், ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன. வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் ஓநாய் பாம்பை உள்ளிட்ட 3 பாம்புகளை துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, மீட்ட வன உயிரின பாதுகாப்புக் குழுவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவையில், ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன. வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் ஓநாய் பாம்பை உள்ளிட்ட 3 பாம்புகளை துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, மீட்ட வன உயிரின பாதுகாப்புக் குழுவிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
covai snake catch

கோவை நகரின் புறநகர் பகுதிகளான போத்தனூர், சூலூர், சிந்தாமணிப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் ஒரே நாளில் 3 பாம்புகளை வன உயிரின பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் மோகன் மீட்டார். அதில் 2 சாரைப் பாம்புகள் மற்றும் ஒரு சாதாரண ஓநாய் பாம்பு ஆகியவை இருந்தது. சாரைப் பாம்புகள் விஷமற்றவை மற்றும் பொதுவாக தொந்தரவு செய்யாதவரை, யாரையும் தாக்குவதில்லை. இவை எலிகளை மட்டுமல்லாமல், சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பல்வேறு உயிரினங்களையும் உணவாக உட்கொள்கின்றன. நகர பகுதிகளில் எலிகளை வேட்டையாடுவதன் மூலம், இவை பூச்சி கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன.

Advertisment

இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் ஓநாய் பாம்பு ஒரு விஷமற்ற இனமாகும். தங்களை அச்சுறுத்தும்போது இந்த பாம்பு ஆக்ரோஷமாக மாறக் கூடும்.

பின்னர், மீட்கப்பட்ட சாரைப் பாம்புகள் மற்றும் ஓநாய் பாம்பு ஆகியவை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. கோவை மற்றும் அதைச் சுற்றி உள்ள உள்ளூர் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான வன உயிரின பாதுகாப்பு குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: