New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/27/SlYUPtbd51Cgso4YGFMQ.jpg)
தோனியை ட்ரோல் செய்தவர்களை வெளுத்து வாங்கிய ரசிகர்; தூக்கி வைத்து கொண்டாடும் நெட்டிசன்கள்!
சி.எஸ்.கே அணியின் பிளே ஆஃப் சுற்றுக் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், சி.எஸ்.கே அணியின் தீவிர ரசிகர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சென்னை அணி ரசிகர்களுக்கு உற்சாகம் அடைய வைத்துள்ளது.
தோனியை ட்ரோல் செய்தவர்களை வெளுத்து வாங்கிய ரசிகர்; தூக்கி வைத்து கொண்டாடும் நெட்டிசன்கள்!
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் சி.எஸ்.கே அணியின் பிளே ஆஃப் சுற்றுக் கனவு முடிவுக்கு வந்துள்ளது. இதனால், சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் பலரும் புலம்பி வந்த நிலையில், சி.எஸ்.கே அணியின் தீவிர ரசிகர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சென்னை அணி ரசிகர்களுக்கு உற்சாகம் அடைய வைத்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் வென்றாலும் சி.எஸ்.கே அணியால் ஃபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்று கேள்வி எழுகிறது. இதனால், சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். சி.எஸ்.கே அணியின் தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் காயம், மெகா ஏலத்தில் செய்த தவறு, பிளேயிங் 11 மாற்றம், தோனியின் கேப்டன்சி என்று ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதனால், சி.எஸ்.கே. அணியின் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.
முதல் போட்டிக்கு இருந்த டிக்கெட் தேவை, தற்போது குறைந்துள்ளது. இதனால், சி.எஸ்.கே. ரசிகர்கள் பலரும் நேரில் சென்று போட்டிகளை கண்டுரசித்து வருகின்றனர். ஐதராபாத் அணிக்கு எதிராக சி.எஸ்.கே அணி தோல்வியடைந்த பின் ரசிகர் ஒருவர் அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ரசிகர் பேசுகையில், 2010-இல் தென்னாப்பிரிக்காவுக்கு சாம்பியன்ஸ் லீக் விளையாடுவதற்காக சி.எஸ்.கே அணியை அழைத்து சென்றான் என் தலைவன்.. என்ன பிட்ச், என்ன நிலை எதுவும் தெரியாது.
அப்போது இந்தியாவில் இருந்து சென்ற மும்பை, ஆர்.சி.பி அணிகளும் திணறினார்கள்.. முதல் போட்டி நியூசிலாந்து அணி சென்ட்ரல் டிஸ்ட்ரிட் அணிக்கு எதிராக ஆடினோம்.. மொத்த நியூசிலாந்து அணியுடன் அதில் இருந்தார்கள். அந்த போட்டியில் வென்றுவிட்டு, அடுத்ததாக ஜெயவர்தனேவின் வயாபா அணியை எதிர்கொண்டோம். மொத்த இலங்கை அணியும் இருந்தார்கள். அதிலும் வென்றோம்.
சாம்பியன்ஸ் லீக் பற்றி சில தற்குறிகளுக்கு தெரியாது. அதன்பின் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணிக்கு எதிராக சி.எஸ்.கே ஆடியது. ஆரோன் ஃபின்ச் தலைமையில் மொத்த ஆஸ்திரேலியா அணியும் ஆடினார்கள். அந்த போட்டியை டிரா செய்த போதும், சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தோம். அதன்பின் தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணியை சொந்த மண்ணிலேயே வென்றோம். ஆனால் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் வாரியர்ஸ் அணி வந்து நின்றது. அப்போது முதல் பேட்டிங் ஆடிய சி.எஸ்.கே அணி வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனாலும், வாரியர்ஸ் அணியை மண்ணை கவ்வ வைத்தான் என் தலைவன் தோனி. தென்னாப்பிரிக்கா சென்று கோப்பையை தூக்கிவந்தாரு.அன்றிலிருந்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கூட தோனியால் மிரண்டுபோனார்கள்.
அதன்பின் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சி.எஸ்.கே அணி கோப்பையை வென்று கொண்டே இருந்தது. திடீரென இந்த சீசனில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றபின், சி.எஸ்.கே ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்துவிட்டார்கள். மற்றபடி சி.எஸ்.கே ரசிகர்கள் யாரும் தோனியை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உயிர் உள்ளவரை தோனி ரசிகன் தான் என்று அவர் கூறினார். இந்த வீடியோ சி.எஸ்.கே. ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.