Advertisment

ஏரி, கொளம், நதிய கூட பிளாட் போட்டு வித்தாக்கா... சென்னை வெள்ளம் அவலநிலையை வெளிப்படுத்தும் நெட்டிசன்கள்!

மக்கள் தங்கள் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அவலநிலையை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Cyclone Michaung Destruction Chennai netizens reaction in tamil

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைக்காத நிலையில், சில பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

Advertisment

Chennai Rain | Cyclone Michaung: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தப் பகுதிகளில் புயல் மற்றும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. சில பகுதிகள் தீவுகள் போல் காட்சியளிக்கிறது. 

இடைவிடாது பெய்த மழையால் சென்னையின் வடிகால் அமைப்பில் கடுமையான நீர்த்தேக்கமும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. தெருக்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்தை சீர்குலைத்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

நகரில் தற்போது மின் விநியோகம் மெல்ல மெல்ல சீரமைக்கப்பட்டு வந்தாலும், பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைக்காத நிலையில், சில பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

இந்நிலையில், மக்கள் தங்கள் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அவலநிலையை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். உதவி செய்ய மற்றும் தேவைப்படும் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Cyclone Michaung Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment