‘தீண்டாமை சாதியோடு மட்டும் நிற்கவில்லை’: டெலிவரி பார்ட்னராக ஒரு நாள்: டெல்லி இளைஞரின் அதிர்ச்சி தரும் அனுபவம்!

சாதாரண மக்களால் கவனிக்கப்படாதவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள சல்மான் சலீம் பல்வேறு வேலைகளில் பணிபுரிவது வழக்கம். டெலிவரி பார்ட்னர்கள் நடத்தப்படும் விதத்தை ஜெப்டோ, பிளின்கிட் போன்ற நிறுவனங்கள் முன்னின்று கவனிக்க வேண்டும் என்று சலீம் வலியுறுத்தினார்.

சாதாரண மக்களால் கவனிக்கப்படாதவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள சல்மான் சலீம் பல்வேறு வேலைகளில் பணிபுரிவது வழக்கம். டெலிவரி பார்ட்னர்கள் நடத்தப்படும் விதத்தை ஜெப்டோ, பிளின்கிட் போன்ற நிறுவனங்கள் முன்னின்று கவனிக்க வேண்டும் என்று சலீம் வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
blinkit

சாதாரண மக்களால் கவனிக்கப்படாதவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள சல்மான் சலீம் பல்வேறு வேலைகளில் பணிபுரிவது வழக்கம்.

சாதாரண மக்களால் கவனிக்கப்படாதவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள சல்மான் சலீம் பல்வேறு வேலைகளில் பணிபுரிவது வழக்கம். டெலிவரி பார்ட்னர்கள் நடத்தப்படும் விதத்தை ஜெப்டோ, பிளின்கிட் போன்ற மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் முன்னின்று கவனிக்க வேண்டும் என்று சலீம் வலியுறுத்தினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

கிக் தொழிலாளர்களின் அன்றாட கஷ்டங்களைப் புரிந்து கொள்வதற்காக, டெல்லியைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் நிறுவனமான வைப்ஸ் நெட்வொர்க்கின் கிரியேட்டிவ் ஹெட் சல்மான் சலீம், ஒரு நாள் Blinkit டெலிவரி பார்ட்னராகப் பணியாற்றினார். டெலிவரி தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்ப்பதே சலீமின் நோக்கமாக இருந்தது.

அவர் திரும்பிச் சென்றபோது புதிய கண்ணோட்டத்தையும், இந்தியாவில் இன்னும் பலருக்கு உழைப்பின் கண்ணியம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது என்ற கசப்பான உண்மையையும் உணர்ந்தார். "தீண்டாமை என்பது சாதியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இந்தத் தொழிலும் இன்னும் தனது சரியான கண்ணியத்தைப் பெறப் போராடிக் கொண்டிருக்கிறது" என்று சலீம் தற்போது வைரலாகி வரும் தனது LinkedIn பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

சாலையில் தனது ஒரு நாள் போக்குவரத்து நெரிசல், தாங்க முடியாத டெல்லி வெப்பம் மற்றும் அதைவிட மோசமான ஒன்று - பல டெலிவரி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நுட்பமான, அன்றாட பாகுபாடு ஆகியவற்றால் நிறைந்திருந்தது என்று சலீம் கூறினார். கட்டிட நுழைவாயில்களில் நிறுத்தப்படுவது முதல் பிரதான லிஃப்ட்களில் அனுமதி மறுக்கப்படுவது வரை, அவரது அனுபவம் இந்தத் தொழிலாளர்கள் தாங்கள் சேவை செய்யும் சமூகத்திலேயே எவ்வளவு தூரம் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது.

“நான் படிக்கட்டுகளில், சில சமயங்களில் 4வது மாடி வரை ஏறும்படி கேட்கப்பட்டேன் அல்லது சர்வீஸ் லிஃப்டைப் பயன்படுத்தும்படி கூறினார்கள். சமூக ஊடகங்களில் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் அதே படித்த மற்றும் பணக்காரர்கள் தான் இவர்கள்” என்று அவர் கூறினார்.

“ஒரு சமூகமாக, டெலிவரி செய்பவர்களும் மற்றவர்களைப் போலவே மனிதர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சீருடை அல்லது தோற்றத்தை வைத்து அவர்களின் குணாதிசயம், தகுதி அல்லது மதிப்பை நாம் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தொழிலைப் பொருட்படுத்தாமல் மரியாதை தர வேண்டும்” என்று அவர் எழுதினார்.

ஜெப்டோ (Zepto) மற்றும் பிளின்கிட் (Blinkit) போன்ற மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் சலீம் அழைப்பு விடுத்தார். “மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்... டெலிவரி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இந்த பிரச்சாரங்கள் கருணை மற்றும் கண்ணியத்தை ஊக்குவிக்க உதவும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பதிவைப் பாருங்கள்:

saleem

இந்தப் பதிவு ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது. ஒரு பயனர், “நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட நாட்டில் பாகுபாடு மிகவும் ஆழமாக வேரூன்றிவிட்டது, எதுவும் மாறப்போவதில்லை என்று நான் நினைக்கிறேன். நான் பார்ப்பது என்னவென்றால், ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே இதற்கு எதிராகப் போராட முடியும். மக்கள் எதை கண்டு பயப்படுகிறார்களோ அதை மதிக்கிறார்கள். மேலும், அழுக்கான பணக்காரர்கள் தொழிற்சங்கங்களுக்கு பயப்படுகிறார்கள்” என்று எழுதினார்.

மற்றொரு பயனர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்,  “சமீபத்தில் எனக்கு ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது - ஒரு ஜெப்டோ (Zepto) டெலிவரி பையன் லிஃப்டில் ஏறினார், சில நொடிகளில் ஒரு பெண், 'நீங்க டெலிவரி பையன்தானே?' என்று கேட்டார். அவர் இரண்டு முறை அவரிடம் விசாரித்து, அவர் வேற லிஃப்டைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறினார். அவர் அமைதியாக அது வேலை செய்யவில்லை என்றும், காவலாளி தான் இந்த லிஃப்டைப் பயன்படுத்தச் சொன்னார் என்றும் பதிலளித்தார். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் முகபாவனை மிகவும் அலட்சியமாக இருந்தது - அது எனக்கு சங்கடமாக இருந்தது. அவர் ஏன் எங்களுடன் லிஃப்டைப் பயன்படுத்தக் கூடாது? நாமெல்லாம் பிழைப்புக்காக முயற்சிக்கும் சாதாரண மனிதர்கள் தானே. அதாவது, நாமெல்லாம் ஒரே காற்றை சுவாசிக்கும் மனிதர்கள், யாருடைய தொழிலுக்காகவும் அவர்களை வித்தியாசமாக நடத்தக் கூடாது. அந்த மனநிலையை மாற்றுவோம் - இன்றிலிருந்து தொடங்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நபர் ஒருவர்,  “இந்த மனநிலை மாறாது, குறைந்தபட்சம் அவ்வளவு சீக்கிரம் மாறாது. ஒருவிதமான அதிகாரப் பிரயோகம் மற்றும் கட்டாயப்படுத்தல் தேவைப்படுகிறது. அரசாங்கங்கள் அதைச் செய்யாது... பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்கள் இருந்தும் எந்த விதமான அமலாக்கமும் இல்லை. எனவே, இதுபோன்ற சங்கங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் நிறுவனங்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும். நிச்சயமாக ரைடர்கள் ஒன்றிணைந்து போராடினால் ஒழிய நிறுவனங்கள் இதைச் செய்யாது. அது நடப்பதற்கு வாய்ப்பில்லை, ஆனால், நான் கூறியது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று எழுதினார்.

இது சலீமுக்கு ஒரு முறை நடந்த சம்பவம் அல்ல. சாதாரண மக்களால் கவனிக்கப்படாதவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள அவர் ஒருமுறை இ-ரிக்ஷா ஓட்டியுள்ளார் மற்றும் தினக்கூலி தொழிலாளியாகவும் பணியாற்றியுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: