/indian-express-tamil/media/media_files/2025/10/31/istockphoto-1472126826-612x612-1-2025-10-31-09-36-02.jpg)
புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமான ஏனாம் பகுதியில் அமைந்துள்ள ஏலுரு மாவட்டத்தில், ஜங்கா ரெட்டி என்ற இடத்தில் சமீபத்தில் ஒரு அதிசயமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரம்பேட்டா சாலையில் உள்ள படா கங்கனம்மா கோயில் அருகே ஒரு பெரிய பனைமரம் உள்ளது. அந்த பனைமரத்தடியில் ஒரு பக்தர் வழக்கம்போல் பூஜை செய்ய வந்தபோது, அங்கு ஒரு நாகப்பாம்பு அமைதியாக இருந்தது. பாம்பை கண்டதும், அந்த பக்தர் அதனை தெய்வமாக எண்ணி, மரியாதையுடன் பூஜை செய்து, தண்ணீர் தெளித்து வணங்கினார். அருகில் இருந்த சிலர் இந்த நிகழ்வை தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்தனர்.
பாம்பு பக்தரை நோக்கி அமைதியாக சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில், எந்த ஆபத்தும் இல்லாமல் பாம்பு திடீரென அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டது. இதனை பார்த்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்; சிலர் இதனை தெய்வத்தின் அருள் எனக் கூற, சிலர் இயற்கையின் அதிசயமாகவே எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வு கார்த்திகை மாதத்தில் நடந்ததால், அந்த பக்தர்கள் இதனை ஒரு நல்ல அறிகுறியாகக் கருதி, பாம்புக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த சம்பவம் குறித்து பதிவான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அதனை பகிர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உள்ளூரில் இது ஒரு பேச்சுக் கலந்துரையாடலாக மாறி, மக்கள் “அது உண்மையிலேயே தெய்வத்தின் வருகையா?” என ஆச்சரியப்படுகின்றனர்.
படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு... பூஜை செய்து அனுப்பி வைத்த பக்தர் - வைரல் வீடியோ! pic.twitter.com/MLWhK2frZr
— Indian Express Tamil (@IeTamil) October 31, 2025
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us