New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/04/xE2rDqOqzqLJh6ZoLbvK.jpg)
அப்பகுதி மக்கள், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
அப்பகுதி மக்கள், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
காரைக்காலில் ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பகுதியில் உள்ள வீட்டில் ஒருவர் நாய் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நாய் மற்றும் ஆடு இரண்டும் ஒரே நேரத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது. அப்போது தனது குட்டிகளுக்கு நாய் பால் கொடுப்பதுடன், ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும், சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.