Advertisment

திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வளர்ப்பு யானை; லாரியில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் சென்றதால் பரபரப்பு

viral video: கேரளாவில் கோயில் திருவிழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வளர்ப்பு யானை ஒன்று திடீரென லாரியிலிருந்து இறங்கி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Elephant 1

லாரியிலிருந்து இறங்கி வனப்பகுதிக்குள் நுழைந்த யானை: வீடியோ

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Elephant viral video: கேரளாவில் கோயில் திருவிழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வளர்ப்பு யானை ஒன்று திடீரென லாரியிலிருந்து இறங்கி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisment

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், அவ்வப்போது வனவிலங்குகள் தாக்கி பொதுமக்கள் உயிர் இழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. 

இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் கோயில் திருவிழாவிற்காக அழைத்து செல்லப்பட்ட யானை, ஒன்று திடீரென லாரியில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் அக்கரம்மாள் குரூப்ஸ் என்ற அறக்கட்டளைக்கு சொந்தமாக ஏராளமான வளர்ப்பு யானைகள் உள்ளது. 

கோயில் திருவிழாக்களில் இந்த யானைகள் பங்கேற்பதற்காக அவ்வப்போது லாரிகள் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் சேகரன் என்ற யானை நேற்று இரவு மலப்புரத்தில் இருந்து பட்டாம்பி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. 

பாலக்காடு அருகே உள்ள வடக்குமுரி என்ற பகுதி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் வந்த போது, லாரியின் ஓட்டுநர் மற்றும் யானை பராமரிப்பாளர்கள் தேநீர் அருந்துவதற்காக சாலையோரம் லாரியை நிறுத்தியுள்ளனர். 

யானை பாகன்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க முடிவு செய்த நிலையில், லாரியை விட்டு இறங்கி ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு தேநீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக யானை லாரியில் இருந்து இறங்கி தப்பியது. தொடர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி ஓடிய யானை, அவ்வழியாக சென்ற ஒருவரை தாக்கியது. 

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் சில கடைகள் மற்றும் வீடுகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இந்த யானை தாக்கியதில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஒரு ஆடு ஆகியவை உயிரிழந்தன. 

யானை லாரியில் இருந்து இறங்கியதை அறிந்த பாகன்கள், உடனடியாக யானையை பிடிப்பதற்காக முயற்சித்தனர். 

அப்போது அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்த யானை அங்கிருந்து வர மறுத்து சேட்டையில் ஈடுபட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தற்போது அந்த யானை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மீண்டும் லாரியை நோக்கி அழைத்து வரப்பட்டு வருகிறது. திடீரென யானை ஒன்று சாலையில் நடமாடிய சம்பவத்தால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment