New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/JLRye2x3G3LQahv9ij0Z.jpg)
ஸ்மார்ட் சிட்டியான கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் மாநகரத்தில் தேங்காமல் இருக்க பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு ஒரு சில பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், ஒரு சில பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை, உக்கடம் கோட்டைமேடு 82-வது வார்டு பகுதி ஈஸ்வரன் கோவில் வீதியில் பாதாள சாக்கடை பணிகள் பாதியிலே நிறுத்தி உள்ளனர். மேலும் சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சாலையோரம் கொட்டி உள்ளனர். இரும்பு தடுப்புகளும் சாலையோரம் போட்டு வைத்து உள்ளனர். இதனால் வாகனங்களில் சென்றுவர அப்பகுதி பொதுமக்கள் சிரமம் ஏற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் செல்லும் போது அதன் முன்பு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்து உள்ளனர். அப்பொழுது சறுக்கி கீழே விழுந்து உள்ளனர்.
உக்கடத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை பணிகள்; விபத்துக்குள்ளான 2 சக்கர வாகனம்: வைரல் சி.சி.டி.வி #CCTVFootage | #Coimbatore pic.twitter.com/8MbhjZ4KUU
— Indian Express Tamil (@IeTamil) January 22, 2025
அந்த வீடியோ அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் "பணிகள் நடக்குதா ? இல்லையா ? - உயிர் பலி ஏற்படாமல் பாத்துக்கோங்க" என்று பதிவு செய்து தற்பொழுது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.