19 வயது பெண்ணின் உயிரைப் பறித்த வைரல் சேலஞ்ச்.. மாரடைப்பில் முடிந்த ட்ஸ்டிங் டிரெண்ட்!

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரென்னா ஓ ரூர்க் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக அவர் செய்த டஸ்டிங் சேலஞ்ச் (dusting challenge) அவரின் உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரென்னா ஓ ரூர்க் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக அவர் செய்த டஸ்டிங் சேலஞ்ச் (dusting challenge) அவரின் உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
-dusting-challenge

19 வயது பெண்ணின் உயிரைப் பறித்த வைரல் சேலஞ்ச்.. மாரடைப்பில் முடிந்த ட்ஸ்டிங் டிரெண்ட்!

அமெரிக்காவின் அரிஜோனா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரென்னா ஓ ரூர்க் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக அவர் செய்த டஸ்டிங் சேலஞ்ச் (dusting challenge) அவரின் உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலமாவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்காகவும் அதிக பார்வையாளர்களை பெறுவதற்காகவும் அவர்கள் பல்வேறு சவால்களை செய்யவும் துணிகின்றனர். அந்த வகையில் செய்யப்படும் ஒரு ஆபத்தான சவால் தான் `டஸ்டிங் சவால்’.

இது குரோமிங் அல்லது ஹஃபிங் என்றும் கூறப்படும். இது வீடு சுத்தம் செய்யும் பொருட்களை உள் இழுப்பதை உள்ளடக்கிய ஒரு வைரல் ட்ரெண்ட் ஆகும். இதைத்தான் ரென்னாவும் முயற்சித்திருக்கிறார். ரென்னா கீபோர்ட் சுத்தம் செய்யும் ஸ்ஃபிரேவை உள்ளிழுக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் , கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு மூளை சாவு ஏற்பட, உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ரென்னாவின் தந்தை ஆரோன் ஓ ரூர்க், ’’எங்களது மகள் எப்போதும்.. நான் பிரபலமாக போகிறேன் அப்பா. நீங்கள் பாருங்கள். நான் நிச்சயம் ஒரு நாள் பிரபலமாவேன்’ என்று கூறிக் கொண்டே இருப்பாள், ஆனால் அவளுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டதை எண்ணி வேதனை தெரிவிக்கின்றேன்” என்று கூறினார்.

மேலும், ``எங்களின் மகள் எப்பொழுதும் துடிப்பாகவும் அக்கறை உள்ளவளாகவும் இருப்பாள். பாடுவதை விருப்பமாக கொண்டிருப்பாள். அவளின் புன்னகையாலும் சிரிப்பாலும் வீட்டையே நிரப்புவாள் ' என்று ரென்னா குறித்து அவளது தாய் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

Advertisment
Advertisements

இத்தகைய கொடிய சவால்கள் பதின் வயதினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்கு முன்பு 2024 மார்ச் மாதம் 11 வயது சிறுவன் இத்தகைய ஆபத்தான சவாலின் மூலம் உயிரிழந்துள்ளான்.

இதுபோன்ற சவால்கள் கடுமையான விளைவுகளுக்கு ஆளாக்க கூடும். இது பெரும்பாலும் இதய செயலிழப்பை ஏற்படுத்தும். சமூக ஊடகப் போக்குகள் எவ்வாறு கொடியதாக மாறக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் என்று ரென்னாவின் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் அவளின் பெற்றோர் இதுபோன்ற ஆபத்தான சமூக ஊடகப் போக்குகள் குறித்த விழிப்புணர்வை தாங்கள் ஏற்படுத்தப் போகின்றோம் என்றும் தெரிவித்தனர்.

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: