10 வயது சிறுவனுக்கு காதுகுத்து விழா; மகனின் ஆசைக்காக மேடையில் 2-வது முறை காதுகுத்திக்கொண்ட 45 வயது தந்தை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 10 வயது சிறுவனுக்கு நடைபெற்ற காதுகுத்து விழாவில் மகனின் ஆசைக்காக 45 வயது தந்தையும் அதே மேடையில் இரண்டாவது முறையாக காதுகுத்திக்கொண்ட சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

author-image
WebDesk
New Update
ear piercing

காதுகுத்து விழாவில் மகனின் ஆசைக்காக 45 வயது தந்தையும் அதே மேடையில் இரண்டாவது முறையாக காதுகுத்திக்கொண்ட சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 10 வயது சிறுவனுக்கு நடைபெற்ற காதுகுத்து விழாவில் மகனின் ஆசைக்காக 45 வயது தந்தையும் அதே மேடையில் இரண்டாவது முறையாக காதுகுத்திக்கொண்ட சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர்கள் சேகர்,செல்வராணி தம்பதியர் இவர்களது 10 வயது மகன் விஸ்வன்நாதன்ஸ் சேகர் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில் செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். 

ear piercing

அண்மையில், சேகர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் மகன் விஸ்வன்நாதன்ஸ்க்கு காதுகுத்து விழா நடத்த முடிவு செய்து பத்திரிக்கை அடித்து தாய்மாமன் உட்பட அனைவருக்கும் வழங்கி இன்று அந்த காதுகுத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக மகன் விஸ்வன்நாதன்ஸ் தந்தையான சேகருக்கும் தன்னைபோல காது குத்த வேண்டும் என அடம்பிடிக்கவே அதனை ஏற்றுக்கொண்ட தந்தை சேகர் மகனின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் அவரும் அதே மேடையில் காதுகுத்திக்கொண்டார். 

Advertisment
Advertisements

ear piercing

ஒரே மேடையில் 10 வயதான மகன் விஸ்வன்நாதன்ஸ் தனது தாய் மாமனான முனிஸ் மடியில் அமர வைத்து காது குத்தி முடித்தவுடன் அதனை தொடர்ந்து 45 வயதான சேகர் தனது தாய்மாமன் அருகே அமர்ந்து இரண்டாவது முறையாக தனது காதை குத்திக்கொண்டு தோடினை அனிந்துகொண்டார். மகனின் ஆசைக்காக தந்தையும் அதே விழா மேடையில் இரண்டாவது முறையாக காதுகுத்திக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: