Advertisment

பொள்ளாச்சி அருகே அதிகாரியின் ஜீப்-ஐ தாக்கிய காட்டு யானை; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 3 பேர்

பொள்ளாச்சி அருகே காட்டு யானை ஜீப்யை தாக்கியதில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
ele jeep

பொள்ளாச்சி அடுத்த நவமலை மின் உற்பத்தி நிலையத்தில் இளமின் பொறியாளராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன். நவமலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஆழியாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு இரண்டு ஊழியர்களுடன் தனது பொலிரோ ஜீப்பில் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது, ஆதாளியம்மன் கோவில் அருகே ஜீப் சென்ற போது எதிர்பாராத விதமாக காட்டு யானை சுள்ளி கொம்பன் வழிமறித்துள்ளது. ஜீப்பை பின்புறமாக நகர்த்த முயல்வதற்குள் யானை ஜீப்பின் முன் பகுதியை தள்ளியதாக கூறப்படுகிறது. 

இதனால், வனப் பகுதியில் உள்ள மரத்தில் சாய்ந்து நின்றது. யானை சென்றவுடன் ஜீப்பிலிருந்து இளமின் பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் உடன் இருந்த இரண்டு ஊழியர்கள் வெளியே வந்துள்ளனர்.

Advertisment
Advertisement

இது குறித்து வனத்துறையினர் மற்றும் ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் காட்டு யானை மீது ஆழியார் காவல் நிலையத்தில் வாகனத்தை தாக்கியதாக நான்கு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment