New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/29/elephant-at-cbe-2025-06-29-10-26-54.jpg)
காட்டு யானையால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். யானை ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, வனப் பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் புகுந்து உணவுப் பொருட்கள், கால்நடைகளுக்கான தீவனங்கள் மற்றும் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவது தற்பொழுது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களாக பெய்த மழையால், வனப்பகுதிகளில் வறட்சி நீங்கி புல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகளும் வனப்பகுதியில் விளைந்துள்ளன. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள், ஊருக்குள் புகுந்து உணவுப் பொருட்களையும், பயிர் வகைகளையும் உண்டு பழகியதால், திரும்பி செல்லாமல் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவை தண்ணீர் மற்றும் உணவு தேடி வீடுகள், கடைகள், மற்றும் விவசாய பயிர்களைத் தின்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடாகம் சீட்டுக்காரர் தோட்டம் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்த முயன்றது. அப்போது, அந்த தோட்டத்து வீட்டில் இருந்த விவசாயி, கன்னட மொழி பேசுபவர் என்பதால், "ஒன்னும் இல்லை போ, போ; நேரா, போ" என்று கன்னடத்தில் யானையிடம் கூறினார். இந்தச் சம்பவத்தை அங்கு இருந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், காட்டு யானையால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். யானை ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில், தடாகம் சீட்டுக்காரர் தோட்டம் பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்த முயன்றது. அப்போது, அந்த தோட்டத்து வீட்டில் இருந்த விவசாயி, கன்னட மொழி பேசுபவர் என்பதால், "ஒன்னும் இல்லை போ, நேரா, போ" என்று கன்னடத்தில் யானையிடம் கூறினார் pic.twitter.com/g4akSROGh8
— Indian Express Tamil (@IeTamil) June 29, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.