New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/09/lt9Sp22xUd8tAJkd5nme.jpg)
யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்டு ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மிரண்டு போய் அங்கும், இங்குமாக ஓடின.
கோவை, துடியலூர் அருகே பன்னிமடையில் இருந்து கதிர்நாயக்கன் பாளையம் செல்லும் வழியில் லட்சுமி நகர் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மணி கவுண்டர் என்பவர் தோட்டத்து வீட்டுக்கு அருகில் புகுந்த 2 காட்டு யானைகள் ஆடு, மாடுகளுக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்று, அட்டகாசத்தில் ஈடுபட்டது.
யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்டு ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மிரண்டு போய் அங்கும், இங்குமாக ஓடியது. அங்கு குடியிருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் கூலி தொழிலாளிகள் உயிர் பயத்தில் உறைந்து போயினர்.
கோவை: தோட்டத்திற்குள் புகுந்த யானைகள்; கால்நடை தீவனங்களை தின்று அட்டூழியம் #Coimbatore pic.twitter.com/YJkTgDmSgy
— Indian Express Tamil (@IeTamil) November 9, 2024
வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.