கால்நடை உணவுகளை தின்ற சென்ற காட்டு யானை கூட்டம்; சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

உணவு தேடி வீட்டிற்கு வந்த காட்டு யானை கூட்டம் கால்நடைக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்று சென்றுள்ளது.

உணவு தேடி வீட்டிற்கு வந்த காட்டு யானை கூட்டம் கால்நடைக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்று சென்றுள்ளது.

author-image
WebDesk
New Update
elep co

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தோட்டத்தின் வீட்டிற்கு உணவு தேடி இன்று அதிகாலை 3 மணிக்கு 6 யானைகள் கொண்ட யானை கூட்டம் வந்து உள்ளது. 

Advertisment

அங்கு தேவராஜின் சகோதரர் மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். யானை கூட்டத்தின் சத்தத்தை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன், வீட்டிற்கு உள்ளேயே இருந்து உள்ளார். 

அங்கு வந்த அந்த யானை கூட்டம் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு மற்றும் தீவனங்களை தின்றதுடன் அங்கு பயிரிடப்பட்டு இருந்த தென்னை மரங்களையும் சேதப்படுத்தி சென்றது. 

Advertisment
Advertisements

அந்த வீடியோ அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று விவசாயி வேலுமணி என்பவரை தாக்கியதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான் 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: