New Update
/indian-express-tamil/media/media_files/Im6uNfEcbVjsrB8vQZmp.jpg)
கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் உணவு தேடி வீட்டிற்குள் வந்த காட்டு யானை அலறி அடித்து மாடிக்கு ஓட்டம் பிடித்த குடும்பத்தினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகளின் வலசை காலம் துவங்கி உள்ளதால் கேரள வனப் பகுதியை ஒட்டி உள்ள தமிழக வனப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. மேலும் மருதமலை வனப் பகுதியிலும் யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த யானைகள் அருகில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. இந்நிலையில் இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை மற்றும் அதன் குட்டி வடவள்ளி ஐ.ஓ.பி காலனி மாலதி நகர் பகுதிக்குள் புகுந்தது. பின்னர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த யானைகள், குமார் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன்றது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு மாடிக்கு சென்று உள்ளனர்.
'எனக்கும் பசிக்கும்ல'; உணவு தேடி வீட்டிற்குள் வந்த யானைகள்: அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர் #Coimbatore
— Indian Express Tamil (@IeTamil) December 3, 2023
இடம்: வடவள்ளி, கோவை pic.twitter.com/AjzmEsBN2f
உள்ளே வந்த யானைகள் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனப் பார்த்து விட்டு திரும்பி சென்றது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.