New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/26/Vv1dI7xI8ekvIPiTCJYb.jpg)
மாலை வரை அங்கேயே முகாமிட்டிருந்த யானை பின்னர் மீண்டும் சுற்று சுவர் ஏறி வனத்திற்குள் சென்றது.
கோவை, காருண்யா வேளாண்மை பல்கலைக் கழகம் : சுற்றுச் சுவர் மீது ஏறி புகுந்த ஒற்றைக் காட்டு யானை - மாலை வரை முகாமிட்டு சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்..!
கோவை ஆலாந்துறை அடுத்து காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு வேளாண் துறையில் பயிலும் மாணவர்களுக்கு படிக்க பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். அங்கு நேற்று காலை சுற்றுச் சுவர் மீது ஏறி உள்ளே புகுந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது.
காருண்யா வேளாண்மை பல்கலை வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானை; பயிர்களை தின்று சேதம் #Elephant pic.twitter.com/oNVgNBYzFF
— Indian Express Tamil (@IeTamil) December 26, 2024
பின்னர் மாலை வரை அங்கேயே முகாமிட்டு மீண்டும் சுற்று சுவர் ஏறி சென்று உள்ளது. அதை அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த செல்போன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.