New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/16/LAy4m8CSAJZWGH3CLTaf.jpg)
கோவை மருதமலை, வடவள்ளி, தடாகம், சோமையநாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உணவு தேடி அலைந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வடவள்ளி ஐ.ஓ.பி காலனி, சௌந்தரராஜன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்த கேட்டின் கதவை திறக்க முயற்சி செய்தது.
அந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கேட்டை திறக்க முடியாததால் தனது கூட்டத்துடன் அங்கு இருந்து கிளம்பி சென்ற காட்சிகளும் கேமராவில் பதிவாகி உள்ளது. வனப் பகுதியில் இருக்கின்ற உணவை தானாக தின்று வளரும் யானைகள் வறட்சியின் காரணமாக வெளியேறி வருகிறது. கடந்த சில மாதங்களாக இவ்வாறு வெளியேறி சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்கள், கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள், வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு போன்ற பொருள்களை ருசி கண்டு வருகிறது.
உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள்: பூட்டிய வீட்டின் கதவை திறக்க முயன்ற சி.சி.டி.வி காட்சி#Elephant pic.twitter.com/6qbfqh9bxD
— Indian Express Tamil (@IeTamil) January 16, 2025
தற்பொழுது வனப்பகுதியில் வறட்சி நிலை மாறிய பின்பும் வனப் பகுதிக்குள் செல்லாமல், கிராமப் பகுதிகளில் முகாமிட்டு உணவு தேடி அலைந்து திரிந்து கொண்டு உள்ளது. இதற்கு தமிழக அரசு அறிவித்தபடி வனப் பகுதியை சுற்றியும் வேலி அமைத்து ஊருக்குள் வராமல் தடுத்தால் மட்டுமே வனப் பகுதியில் இருக்கின்ற உணவை உண்டு உயிர் வாழ வனவிலங்குகள் கற்றுக் கொள்ளும், இதனால் பொது மக்களுக்கு, விவசாயிகளுக்கும் ஏற்படும் சேதம் தவிர்க்கப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே யானை - மனித மோதலை தவிர்க்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.