Advertisment

உணவு தேடி ஊருக்குள் ரவுண்ட்ஸ் வந்த ஒற்றை யானை: வீடியோ வைரல்

நஞ்சுண்டாபுரம் பகுதியில் பள்ளத் தாக்கில் இருந்து இரவு நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை உணவு தேடி வந்தது.

author-image
WebDesk
New Update
ele cb

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்து உலா வருவது அதிகரித்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பன்னிமடை பகுதியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளை அப்பகுதி இளைஞர்கள் ஆபத்தை உணராமல் டார்ச் லைட் அடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். 

இந்நிலையில் நேற்று இரவு தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் பள்ளத் தாக்கில் இருந்து இரவு நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை உணவு தேடி வந்தது. ரவுண்ட்ஸ் வருவது போன்று மேற்கு வீதிகள் வழியாக வடக்கு நோக்கி வனப்பகுதிக்கு நடந்து சென்றது. 

அதனை பார்த்த அங்கு இருந்த ஒரு குடும்பத்தினர் பதறிப்போய் வெளியே வந்து கூச்சலிட்டு திட்டி வசைபாடினர். அதனை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisment
Advertisement

மேலும் தொடர்ந்து ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உலா வருவதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு வனத்துறையினர் அதனை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment