Advertisment

கோவையில் யானைகள், காட்டுப்பன்றி ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம்

தடாகம் பகுதியில் காட்டு யானைகள், காட்டுப்பன்றி ஆகியவை தொடர்ந்து வந்ததால் மக்கள் அச்சம்

author-image
WebDesk
New Update
Thada ele.png
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாவட்டம் தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி 4 காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்துள்ளது. 

Advertisment

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த  வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

யானைகளை விரட்டிய சிறிது நேரத்திலேயே அங்கு  ஒரு காட்டு பன்றியும் திடீரென வந்ததால் அங்கிருந்த தெரு நாய்கள் காட்டு பன்றியை துரத்தின. சிறிது நேரத்தில் அந்த காட்டு பன்றி வனப்பகுதிக்குள் சென்றது. 

இப்பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு  சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அடிக்கடி வனவிலங்குகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி இங்கு வருவதாகவும், வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment