ஆட்டுக்குட்டி போல குட்டியானையை தோளில் சுமந்த தமிழக வன ஊழியர் - டிரெண்டிங் ஆகும் போட்டோ
சரத்குமார், குட்டி யானையை, தோளில் சுமந்தபோது எடுத்த போட்டோ, அந்த நேரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், பிளாஸ்பேக் என்ற பெயரில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.
சரத்குமார், குட்டி யானையை, தோளில் சுமந்தபோது எடுத்த போட்டோ, அந்த நேரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், பிளாஸ்பேக் என்ற பெயரில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.
elephant rescue,forest guard carries elephant calf, tamil nadu, coimbatore, mettupalayam, forest guard, trending, netizens, twitter,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
பள்ளத்தில் விழுந்த குட்டியானையை மீட்டு, தோளில் சுமந்து அதை தாய் யானையிடம் சேர்த்த வனக்காவலரின் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த நிகழ்வு 2017ம் ஆண்டில் நடைபெற்றிருந்தது. அப்போதே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், மீண்டும் அந்த போட்டோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோ, தற்போது டுவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
Advertisment
Advertisements
Flashback pic. Rescue of an elephant calf by a forest guard from TamilNadu made news. Mr. Palanichamy carried the half on his shoulders which had fallen into a ditch. The calf was later united with its mother. pic.twitter.com/VKqbD3hrc0
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் வனப்பாதுகாவலராக இருந்தவர் பழனிச்சாமி சரத்குமார். 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் தேதியன்று, பெண் யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று போக்குரவத்துக்கு தடை ஏற்படுத்துவதாக அவருக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. சரத்குமார் உள்ளிட்ட வன ஊழியர்கள், பட்டாசுகள் வெடித்தும், பெரிய பெரிய கருவிகளால் ஒலி எழுப்பியும் அந்த யானையை அப்பகுதியிலிருந்து விரட்டினர். தனது குட்டி யானை பள்ளத்தில் விழுந்ததால், தான் தாய் யானை அங்கு அந்த களேபரத்தில் ஈடுபட்டிருந்ததை சரத்குமார் உணர்ந்தார்.
சிறிய பள்ளத்தில் குட்டி யானை விழுந்து கிடப்பதை பார்த்த சரத்குமார், சக ஊழியர்களின் உதவியுடன் அதனை மீட்டார். தனது உடல் எடையை விட அதிகமாக இருந்த குட்டி யானையை தோளில் சுமந்து பல கிலோமீட்டர் தொலைவு நடந்து அதனை அதன் தாய் யானையிடம் சேர்த்தார்.
சரத்குமார், குட்டி யானையை, தோளில் சுமந்தபோது எடுத்த போட்டோ, அந்த நேரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து ஐஎப்எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய், பிளாஸ்பேக் என்ற பெயரில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.
Kudos to his exceptional act to save the life. Real hero .