New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/25/wGKmty1iIXb7yZ0GqUAM.jpg)
கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோவில் பாதையில் காட்டு யானைகள் உலா வருகிறது. பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இந்த இரண்டு கோவில்களும் வனப் பகுதிக்குள் அமைந்து உள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் படிக்கட்டுகளில் செல்லும் பாதையில் காட்டு யானை முகாமிட்டு, கடந்து சென்றது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதே போல் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் உலா வருகின்றன.
இந்த நிலையில் சமீப காலமாக கோவிலுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் காலை நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் மருதமலை கோவிலில் உள்ள முன்வாயில் கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும், மேலும் அருகில் உள்ள நடை பாதையை முற்றிலுமாக மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்குமாறும், இது குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்து கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறு கோவில் நிர்வாகத்தை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயில் பாதையில் ஹாயாக உலா வரும் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை#Coimbatore pic.twitter.com/L37exeldJY
— Indian Express Tamil (@IeTamil) October 25, 2024
தவறும் பட்சத்தில் மனித - யானை மோதல் ஏதேனும் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் வனத் துறையினர் தரப்பில் தகவலாக தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேடி உலா வரும் யானைகளை வனத்துறை மற்றும் விவசாயிகள் விரட்டுவதால் எங்கு செல்வது என்று தெரியாமல் இன்று காலை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு செல்லும் பாதையில் வாலை சுருட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக யானை உலா வந்து கொண்டு உள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடனும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.