New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/04/V1AdFki4oJx1X5Pkvq7I.jpg)
வன உயிரியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வனப் பகுதியில் தண்டவாளம் செல்லும் அனைத்து இடங்களிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.
வன உயிரியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வனப் பகுதியில் தண்டவாளம் செல்லும் அனைத்து இடங்களிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.
வனப் பகுதியில் உள்ள தண்டவாளத்தை யானைகள் கடக்கும் போது ஏற்படும் விபத்தை நவீன ஏ.ஐ. கேமராக்கள் முற்றிலும் தடுத்த்துள்ளன. நாட்டில் முதன் முறையாக கோவையில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு - கேரளா எல்லையான மதுக்கரை வாளையாறு வன பகுதியில் காட்டு யானைகள், தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு, வருடத்துக்கு ஐந்து யானைகள் இறந்து வந்தன. இந்த நிலையில், ரயிலில் யானைகள் விபத்துக்கு உள்ளாகாமல், இருக்கு நவீன தொழில் நுட்பம் கொண்ட ஏ.ஐ கேமராக்கள் பொருத்த முடிவெடுத்தனர்.
அதன் அடிப்படையில் 12 தெர்மல் மற்றும் 12 ஆப்டிகல் என மொத்தம் 24 அதிநவீன ஏ.ஐ. கேமராக்கள் 12 டவர்களில் 2024 ம் ஆண்டு பிப்ரவரியில் பொருத்தினர். தண்டவாளத்துக்கு 200 மீட்டம் தூரத்தில் யானை வந்தாலே, இந்த கேமராக்கள் அதனை நுகர்ந்து தகவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும்.
அந்த தகவலின் அடிப்படையில், ரயில் இயக்க வழி வகை செய்யப்படும். இவ்வாறு ஏ.ஐ கேமராக்கள் பொருத்திய 1 வருடத்தில் மட்டும் 5011 சிக்னல்கள் தரப்பட்டு, 2500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்று இருக்குன்றன. இந்த நிலையில், இந்த தொழில்நுட்பம் யானைகளின் நகர்வுகளை துல்லிகமாக கணித்து செயல்பட்டதனால், 100% விபத்து தடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதனால், வன உயிரியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வனப் பகுதியில் தண்டவாளம் செல்லும் அனைத்து இடங்களிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.