வளர்த்தவரைப் பார்த்ததும் ஓடி வந்து அன்பை வெளிப்படுத்திய யானைகள்: வைரல் வீடியோ

தங்களை வளர்த்தவர் வந்திருப்பதைப் பார்த்ததும் யானைகள் ஓடி வந்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானைகள் ஓடி வந்த வேகத்தைப் பார்த்தால், அச்சமாக இருந்தது, ஆனால், அவ்வளவு பெரிய அன்பு என்பது தெரிகிறது.

author-image
WebDesk
New Update
elephants love 1

யானைகள் மனிதர்களுடன் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. Image Source: vira x/ Yog (@Yoda4ever) from Saveel Elephant Foundation

தங்களை வளர்த்தவர் வந்திருப்பதைப் பார்த்ததும் யானைகள் ஓடி வந்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானைகள் ஓடி வந்த வேகத்தைப் பார்த்தால், அச்சமாக இருந்தது, ஆனால், அவ்வளவு பெரிய அன்பு என்பது தெரிகிறது. 

Advertisment

யானைகள் உலகில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிக அறிவுத்திறன் கொண்ட பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. யானைகளுக்கு கூர்மையான நினைவாற்றல் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களையும், இடங்களையும் அவை நினைவில் வைத்திருக்கும்.

யானைகள் கூட்டமாக வாழும் சமூக விலங்குகள். இவை தங்களுக்குள் வலுவான பிணைப்புகளைக் கொண்டுள்ளன.
யானைகள் பெரிய உடலமைப்பைக் கொண்டவை. அவற்றின் தும்பிக்கை பல வேலைகளைச் செய்ய உதவுகிறது.
யானைகள் தங்களுக்குள் பல்வேறு விதமான ஒலிகள் மற்றும் உடல் மொழிகள் மூலம் தொடர்பு கொள்கின்றன.

யானைகள் மிகவும் இரக்க குணம் கொண்டவை. தங்களுக்குள் காயம் அடைந்த யானைகளுக்கு அவை உதவி செய்கின்றன.
யானைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மிகுந்த பாசம் கொண்டவை. யானைகள் தங்கள் கூட்டத்திடம் மிகவும் விசுவாசமாக இருக்கும்.

Advertisment
Advertisements

யானைகள் மிகவும் பொறுமையானவை. எந்த ஒரு செயலையும் நிதானமாகச் செய்யும் குணம் கொண்டவை. யானைகள் பொதுவாக அமைதியானவை. ஆனால், தொந்தரவு செய்தால் கோபப்படும்.

யானைகள் காடுகளைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் மனிதர்களுடன் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.

யானைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. எனவே, அவற்றை பாதுகாப்பது நமது கடமை. காடுகளை அழித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற செயல்களை தடுத்து, யானைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலம் நாம் அவற்றைப் பாதுகாக்க முடியும்.

இந்த வீடியோவை Yog (@Yoda4ever) என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. Saveel Elephant Foundation பதிவு செய்துள்ள இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “யானைகள் தங்களை வளர்க்க உதவிய ஒரு பராமரிப்பாளரைக் கண்டால் எப்படி நடந்துகொள்ளும்?” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த எக்ஸ் பயனர் ஒருவர், “நாய்கள் வாலை ஆட்டுகின்றன, யானைகள் காதுகளை ஆட்டுகின்றன, அவை மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாவது பயனர், “ஐயோ, அவரைச் சுற்றி யானைகள் ஒரு பாதுகாப்பு நிலையை எடுப்பதைப் பாருங்கள். அன்பு.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், “இது ரொம்ப அழகான பந்தம்! யானைகளுக்கு கருணையை எப்படிப் பாராட்டுவது என்று தெரியும். விலங்கு உறவுகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: