New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/elephants-1.jpg)
சின்னாற்று பகுதியில் மாலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்த வீடியோ
viral video: சின்னாற்று பகுதியில் மாலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னாற்று பகுதியில் மாலை நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்த வீடியோ
Viral Video: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூர் தடாகம் ஆனைகட்டி பன்னிமடை மாங்கரை மருதமலை ஆனைகட்டி இருட்டு பள்ளம் கோவை குற்றாலம் போன்ற பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் அருகே அமைந்துள்ள காரணத்தால் இங்கு வன விலங்குகள் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
யானை மற்றும் காட்டு எருமை போன்ற விலங்குகள் அதிகமாகவே அண்மைய காலங்களாக அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் இரவில் வரும் யானைகள் இப்பொழுது மாலை நேரங்களிலேயே மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விவசாயிகள் பயிரிடப்பட்டிருக்கும் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு உயிர் சேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
கோவை சின்னாற்றுப் பகுதியில் மாலை நேரங்களில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம் pic.twitter.com/qbYWKcf5Xt
— Balaji (@vananeeli) July 4, 2023
இந்நிலையில் ஆலந்துறை அடுத்த மலை கிராமமான சின்னாற்று பகுதியில் மாலை நேரத்திலேயே இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் வந்து உலாவி வந்துள்ளன. இதனை பார்த்த பொதுமக்கள் யானை வரும் பாதையில் இருந்து அலறி அடித்து கொண்டு ஓடினர்.
இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில் யானை ஊருக்குள் உலா வந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.