Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வைரல்

மனதை உலுக்கும் புகைப்படம்! கேன்சரால் பரிதவிக்கும் தம்பிக்கு தூணாக நிற்கும் அன்பு அக்கா

எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.இதனால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு தூண் போல் நிற்கும் சிறுமியின் புகைப்படம்

Written by WebDesk

எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.இதனால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு தூண் போல் நிற்கும் சிறுமியின் புகைப்படம்

author-image
WebDesk
14 Sep 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 14 Sep 2019 11:20 IST

Follow Us

New Update
facebook viral

facebook viral

facebook viral : 'புற்றுநோய்'... கேட்டவுடனேயே கதிகலங்கவைக்கும் வார்த்தை. அப்படியிருக்க, அதை அனுபவித்துக் கடப்பவர்கள் எத்தனை சிரமத்துக்குள்ளாவார்கள்? அதிலும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்?! நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது இல்லையா? அத்தனை வலி நிரம்பிய ஒரு நோய்க்கும், கடினமான சிகிச்சைக்கும் ஒரு குழந்தை தள்ளப்படுவது வேதனையல்லவா?

Advertisment

நேற்றைய தினம், ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு உலகையே உலுக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் கண்ணீர் விடுவது உறுதி. ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரண்டு குழந்தைகளில், ஒன்று மட்டும் அனுபவிக்கும் கொடுமை பெரிது என்றால், அதை கூடவே இருந்து பார்க்கும் மற்றொரு குழந்தை அதை விட பாவம். என்ன நோய்? எப்படி வந்தது? என்ற விளக்கம் எல்லாம் தெரியவில்லை. ஆனால் தனது தம்பிக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்கு உடல்நலம் சரியில்லை. ஏதோ கஷ்டப்படுகிறான். அவனை தனியாக விட்டு விட கூடாது அவன் கூடவே நாம் இருக்க வேண்டும். 4 வயதில் அந்த சிறுமிக்கு தெரிந்தது இது தான்.

லுகேமியா (Leukemia) - எலும்பு மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய் வகை.இதனால் பாதிக்கப்பட்ட தனது தம்பிக்கு தூண் போல் நிற்கும் சிறுமியின் புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

சிகிச்சைக்காக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த வகையான புற்றுநோய் பாதிக்கப்பட்டால் தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பார்கள். பாதி நேரம் பாத்ரூமில் இருக்க வேண்டிய கொடுமை நிலை ஏற்படும். இந்த நிலைமையில் இருக்கும் தனது தம்பிக்கு ஆறுதலாக முழு நேரமும் மருத்துவமனையில் இருக்கிறாள் அந்த சிறுமி. நோய் தொற்று, குழந்தைகள் பார்க்கக்கூடாது என்பதையெல்லாம் தாண்டி, தனது அன்பு அக்காவின் பாசம் அவனுக்கு தேவை என்பதை உணர்ந்த அவர்களின் பெற்றோர்களும் இதற்கு சம்மதித்துள்ளனர்.

வளரும் பருவத்தில் இதை விட வேறு எதை நாம் பிள்ளைகளுக்கு கற்று தந்துவிட போகிறோம். சொந்த சகோதரன் சகோதரியிடம் அன்பு காட்டாதவர்கள் கட்டாயம் ஒருபோதும் மற்றவர்களிடம் அன்பு செய்ய மாட்டார்கள். இந்த புகைப்படம் வளர்ந்த, வளரும், அனைத்து தலைமுறையினருக்கும் சொல்லி விட்டு செல்லும் பாடம் மிகவும் ஆழமானது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!