/indian-express-tamil/media/media_files/2025/02/13/CriQmzWHnfIZpXRApYSN.jpg)
கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது
கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கொலையே செய்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதியக்கூடாது என்று 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்ட மசோதா கொண்டு வந்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில் பேசும் அவர், “2013-ல் காங்கிரஸ் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய முயற்சித்தது. அதனை பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அது வன்முறைக்கு எதிரான மசோதா. அந்த மசோதாவின் கான்செப்ட் என்னவென்று தெரியுமா? இந்தியாவில் எங்கு கலவரம் நடந்தாலும், இந்துக்கள் மீது மட்டுமே எஃப்.ஐ.ஆர் போட முடியும். கிறிஸ்தவர்கள் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ எஃப்.ஐ.ஆரே போடக்கூடாது. இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்தனர். தெரியுமா உங்களுக்கு, வன்முறை எதிர்ப்பு மசோதா 2013 (Anti-Violence Bill 2013).
இதைவிட கேடுகெட்ட, காட்டுமிராண்டித்தனமான, ஒருதலை பட்சமான, மோசமான ஒரு சட்டத்தை உலகத்தில் நீங்கள் எங்காவது காட்ட முடியுமா? இந்தியாவில் வேண்டாம். உலகத்தில் எங்காவது காட்டிட முடியுமா? ஒரு கலவரம் நடந்தால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிய வேண்டும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது வழக்கே பதிய கூடாது. கொலையே நடந்து இருந்தாலும் வழக்கு பதியக்கூடாது" என்று பேசியிருந்தார்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்வத்தாமன் இப்படி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில் அவர் அவ்வாறு பேசியிருப்பதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
இது குறித்த உண்மையை கண்டறிய, நியூஸ் மீட்டர் சார்பில் 'வன்முறை எதிர்ப்பு மசோதா 2013' என்ற மசோதா குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்க்கப்பட்டுள்ளது. அப்போது, இதன் பெயர் வகுப்புவாத வன்முறை தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான அணுகல்) மசோதா -2014 (Prevention of Communal Violence (Access to Justice and Reparations) Bill - 2014) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தேடியபோது, 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தி இந்து வெளியிட்டுள்ள செய்தியின் படி, எதிர்க் கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிய வைத்துள்ளது.
மேலும், இந்த மசோதாவை பதிவிறக்கம் செய்து அதனை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது சாதி, மதக் கலவரங்களை ஒடுக்கவும், திட்டமிட்டு சமூகத்தில் விளிம்புநிலையில் இருப்பவர்களை தாக்கும் செயல்களை தடுப்பதே இம்மசோதாவின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது.
மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு (group) ஒருவர் எந்த அடையாளத்தை உடையவர் (group) என்பதை வைத்து திடீரெனவோ அல்லது முன் திட்டமிடலுடனோ அவருக்கு எதிராக நடத்தப்படும் செயல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் பொருளாதார இழப்புகள் மற்றும் அதன் மூலமாக தேசத்தின் மதசார்பற்ற தன்மையை சிதைத்தல் என்பதை 'வகுப்பு மற்றும் இலக்கு வன்முறை' (communal and targeted violence) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மசோதாவில் பிரிவு இ (e) படி, பிரிவு (group) என்பதற்கு ஒரு மாநிலத்தில் இருக்கும் மத சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இனத்ததவர்கள் (எஸ்.சி) மற்றும் பழங்குடியினர்கள் (எஸ்.டி) என்று விளக்கப்பட்டுள்ளது. இதில் மத சிறுபான்மையினர் தவிர்த்து மற்ற மூன்று பிரிவுகளில் இருக்கும் மொழி சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி/எஸ்.டி மக்களும் இந்துக்கள் தான் என்பதை அறியமுடிகிறது.
அஸ்வத்தாமன் கூறுவதுபோல, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் எந்த குற்றம் செய்தாலும் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடக்கூடாது என்று இருப்பதகாவும், அவர்கள் கொலையே செய்தாலும் வழக்கு பதியக்கூடாது என்று இருப்பதாகவும் இந்துக்கள் மீது மட்டுமே வழக்கு பதிய வேண்டும் என்று சட்ட மசோதா சொல்வதாகவும் அந்த மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், கலவரம் நடந்தால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிய வேண்டும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது வழக்கே பதிய கூடாது என்று காங்கிரஸ் 2013 ஆம் ஆண்டு மசோதா தாக்கல் செய்ததாக பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியது தவறான தகவல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.