மாடு கட்டிப்போடும் இடத்தில் புரளும் வலதுசாரி ஆதரவாளர்? உண்மையில் உ.பி- யில் நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசத்தில் மாடுகள் கட்டிப்போடும் இடத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் படுத்து புரள்வதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மாடுகள் கட்டிப்போடும் இடத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் படுத்து புரள்வதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Fact Check right wing supporter rolling on cattle shelter in uttar pradesh viral video Tamil News

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாடுகள் கட்டிப்போடும் இடத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் படுத்து புரள்வதாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாடுகள் கட்டிப்போடும் இடத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் படுத்து புரள்வதாக சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment

சிறிய கார் ஒன்றில் இருந்து இறங்கும் நபர் ஒருவர், சாலையோரம் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரில் படுத்து புரளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் வலதுசாரி ஆதரவாளர் என்றும், அவர் புரளும் இடம் மாடுகளை கட்டி போடும் இடம். உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் வலதுசாரிகளின் நிலையும் விரைவில் இதுபோல் மாறப்போகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

Advertisment
Advertisements

உண்மைச் சரிபார்ப்பு

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி டிஜிட்டல் ஆவணப்படம் (Digital Documentary) என்ற யூடியூப் சேனலில் புனித் சூப்பர்ஸ்டார் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் நேர்காணல் ஷார்ட்ஸாக வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த வீடியோவின் 00:04 பகுதியில், வைரலாகும் வீடியோவில் உள்ள அதே காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கொண்டு வைரலாகும் வீடியோவில் இருக்கும் நபர் புனித் சூப்பர்ஸ்டார் என்று தெரிய வருகிறது. கிடைத்த தகவலை கொண்டு தொடர்ந்து இணையத்தில் தேடிப் பார்த்துள்ளனர்.  

அப்போது, புனித் சூப்பர்ஸ்டார் தொடர்பாக இந்தியா டி.வி ஊடகம் 2024 ஆம் ஆண்டு மே 12-ல் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, புனித் சூப்பர்ஸ்டார் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்று தெரியவந்தது. மேலும், அவர் தேங்கியிருக்கும் அழுக்கு குட்டையில் புரண்டு வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகியவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பிரகாஷ் குமார் எனும் இவர் புனித் சூப்பர்ஸ்டார் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்வேறு விதமான நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இறுதியாக,  நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், உத்திரபிரதேசத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் மாட்டு சாணம் நிறைந்த மாடுகளை கட்டி போடும் இடத்தில் படுத்து புரளுவதாக வைரலாகும் வீடியோவில் இருப்பது புனித் சூப்பர்ஸ்டார் என்கிற இன்ஸ்டாகிராம் பிரபலம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.

https://newsmeter.in/fact-check-tamil/right-wing-supporter-rolling-on-cattle-shelter-at-uttar-pradesh-743340

Viral Video Fact Check Social Media Viral Viral Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: