2 நாட்களாக மின்கம்பத்தில் உயிருக்கு போராடிய காகம்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

ராமாபுரத்தில் 2 நாட்களாக மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். காகத்தின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

ராமாபுரத்தில் 2 நாட்களாக மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். காகத்தின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crow rescue 1

ராமாபுரத்தில் 2 நாட்களாக மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சென்னை, ராமாபுரத்தில் 2 நாட்களாக மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Advertisment

சென்னை ராமாபுரம் பூத்தப்பேடு பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் நேற்று முன்தினம் காகம் ஒன்று சிக்கிக்கொண்டது. மின்சாரம் பாய்ந்து காகம் இறந்துவிட்டது என அப்பகுதி வாசிகள் நினைத்தனர். ஆனால் 2 நாட்களாக அந்தக் காரம் தொடர்ந்து சத்தம் எழுப்பியபடி இருந்ததால், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment
Advertisements

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் தீயணைப்புத் துறையினர் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தில் சிக்கியிருந்த காகத்தை உயிருடன் மீட்டனர். பின்னர் அதற்கு தண்ணீர் கொடுத்து, முதலுதவி சிகிச்சை செய்தனர். இதனால் காகம் இயல்பு நிலையை அடைந்தது. துரிதமாக செயல்பட்டு காகத்தின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: