சாலையில் வரிசையாக அணிவகுத்து செல்லும் மீன்கள்.. அரிய காட்சி வைரல்!

புதுச்சேரியின் ஏனாம் அருகே சாலையில் ஏராளமான மீன்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்துச் சென்றன. 8 மணி நேரத்துக்கும் மேலாக நிலத்தில் உயிர் வாழும் எனக் கூறப்படும் நிலையில், மீன்கள் சாலையில் அணிவகுத்துச் சென்ற அரிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

புதுச்சேரியின் ஏனாம் அருகே சாலையில் ஏராளமான மீன்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்துச் சென்றன. 8 மணி நேரத்துக்கும் மேலாக நிலத்தில் உயிர் வாழும் எனக் கூறப்படும் நிலையில், மீன்கள் சாலையில் அணிவகுத்துச் சென்ற அரிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry | Fish Video | Carp

சாலையில் வரிசையாக ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்லும் மீன்கள்!

புதுச்சேரியின் ஏனாம் அருகே சாலையில் நுற்றுக்ணக்கான மீன்கள் வரிசையாக ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. 8 மணி நேரத்துக்கும் மேலாக நிலத்தில் உயிர் வாழும் எனக் கூறப்படும் நிலையில், மீன்கள் சாலையில் அணிவகுத்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது மிகவும் அரிதான காட்சி என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கோதாவரி ஆற்றில் இருந்து கரையேறி பனையேறி கெண்டை மீன்கள் கூட்டம்கூட்டமாக சாலையை கடந்தன. நீரிலும், நிலத்திலும் வாழும் பனையேறி கெண்டை மீன்கள் மரத்திலும் ஏறும் தன்மை கொண்டது. 

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பனையேறிக் கெண்டை மீனைக் குழம்பு வைத்தால் நெய்யாக மணக்கும் என்று சொல்வார்கள். இம்மீனின் இரு புறத்திலும் முள்கள் இருப்பதால், உயிருடன் இருக்கும் போது நம்மால் வெறும் கைகளால் பிடிக்க முடியாது. அதையும் மீறி நாம் பிடிக்க முற்பட்டால், கைகளில் காயம் ஏற்படுவது நிச்சயம். மழைக்காலங்களில் இம்மீன் தனது கீழ் தட்டுகளைப் பயன்படுத்தி பனைமரம் ஏறும் என்றும், நீரின்றி நிலத்திலேயே 6 முதல் 10 மணி நேரம் உயிர் வாழும் என்றும் கூறப்படுகிறது. பனைமரம் ஏறுவதால் தான் இம்மீனிற்கு பனையேறிக் கெண்டை மீன் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் உவர் நீரிலும் வாழ்வதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை இந்த மீனுக்கு உண்டு.

Viral Pudhucherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: