Advertisment

தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை: தாயுடன் சேர்க்க 2-வது நாளாக வனத்துறை முயற்சி

கோவையில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Elepha cb.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மருதமலை பகுதியில் கடந்த 30-ம் தேதி வனத்துறையினர் ரோந்து சென்ற போது வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே படுத்து இருந்தது. அதன் அருகில் 4 மாத குட்டியானையும் இருந்தது. வனத்துறையினர் பொக்லைன் மூலம் பெண் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்தனர். அப்போது உடனிருந்த குட்டியானை தாயை சுற்றிச் சுற்றி வந்தது.  

Advertisment

பின்னர் யானைக்கு சிகிக்சை அளித்து வந்த போது, திடீரென குட்டி யானை காட்டில் தொலைந்து போனது. இதற்கிடையில் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறிய பின்னர் இந்த யானை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை விராலியூர் அருகே உள்ள பச்சான் வயல் என்ற இடத்தில் குட்டி யானை தனியாக நிற்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் பின் அங்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு ஜீப்பில் ஏற்றி கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள யானை மடுவு பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த குட்டி யானைக்கு புட்டி பால் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குட்டி யானையை தாயுடன் சேர்ப்பதற்காக தாய் யானை நடமாடும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் தாய் யானை வந்து அழைத்து செல்ல வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று 2-வது நாளாக தாயை பிரிந்த குட்டி யானையை  தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக குட்டியானையை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Elephant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment