New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/28/FcCSvZAjzu0TWgImG7VC.jpg)
10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் சிறுவாணி சாலை உள்ளது. இந்த சாலையில் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஐந்து மூக்கு சாலை வழியாக ரோட்டை கடக்க முயற்சி செய்தது. தோட்ட பகுதியில் இருந்து வெளியே வந்த மலைப் பாம்பு மக்கள் நடமாடும் இடத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து இதைப் பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
யப்பா எவ்வளவு பெரிசு.. சாலையில் சென்ற 10 அடி நீள மலைப் பாம்பை பத்திரமாக மீட்ட வனத்துறை#Snake | #viralvideo pic.twitter.com/48oFrGQwWo
— Indian Express Tamil (@IeTamil) December 28, 2024
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.