பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் பேட்ட பாடலை கங்கை அமரன் மீம்ஸ் போட்டு கலாய்த்து இருப்பது ட்விட்டரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கங்கை அமரன் ட்விட்டர்:
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கியுள்ளது.
ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் வெளியாகி மாபெரும் சாதனையை செய்து வருகிறது.
இந்நிலையில், பேட்ட படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியாகி இருந்தது. மரண மாஸ் என்ற பெயரில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினி படம் என்றாலே அதில் கண்டிப்பாக எஸ்பிபி ஒரு பாடலை பாடிருப்பார். பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் பாடலையும் எஸ்பிபி பாடியுள்ளார்.
அவருடன் இணைந்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் -தும் பாடியுள்ளார். இந்நிலையில் கங்கை அமரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனிருத்தை கலாய்த்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
— gangaiamaren@me.com (@gangaiamaren) 4 December 2018
இந்த மீம்ஸை பார்த்த ரஜினி ரசிகர்கள் கங்கை அமரருடன் ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு விளக்கம் அளித்து கங்கை அமரன் மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
என் நண்பர் ரஜனிக்கு என் இன்னொரு நண்பர் மீண்டும் பாடபோகிறார் என்ற ஆவலுடன் தான் பாடலைக்கேட்டேன் சூப்பர் மிக அமக்களமாக இருந்தது .. ஆனால் இதே முழுப்பாடலையும் எஸ்பிபி பாடீருந்தால் இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் .. அனிருத் தவறாக பாடவில்லை . .. நன்றாக இருக்கிறது ஆனால்? https://t.co/WQTxalcHIn
— gangaiamaren@me.com (@gangaiamaren) 5 December 2018
கங்கை அமரன் குறிப்பிடுவது அனிருத்தை என்றாலும், ரஜினி ரசிகர்கள் மரண மாஸ் பாடலை கங்கை அமரன் மீம்ஸ் போட்டது கலாய்த்தது தவறு என்று சமூகவலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.