தீப்பிடித்து எரிந்த கேஸ் நிரப்பிய ஆம்னி கார்... தீயை அணைக்க போராட்டம்: வீடியோ

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-21 141112

கேஸ் நிரப்பிய ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். 

Advertisment

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவர் ஆம்னி காரை வாடகைக்கு ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று தனக்கு சொந்தமான காரில் வாடகைக்கு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி கோயிலுக்கு வந்துள்ளார். 

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கவுண்டம்பாளையம் நோக்கி செல்லும் போது வீரபாண்டி பிரிவு அருகே உள்ள தனியார் கேஸ் பங்கில் காருக்கு கேஸ் பிடித்து விட்டு ஸ்டார்ட் செய்யும் போது தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது. 

Advertisment
Advertisements

உடனடியாக இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இச்சம்பவத்தினால் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: