/indian-express-tamil/media/media_files/2025/09/29/whatsapp-image-2025-09-2025-09-29-16-49-51.jpg)
சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பிடித்து அருகில் உள்ள ஏரியில் விட்டனர். சிதம்பரம் அருகே உள்ள கூடுவேலி வடக்கு பகுதியை சேர்ந்தவர் அருள்பிரபு. தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு குடும் பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் பின்பு றம் ஏதோ ஊர்ந்து செல்லும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அருள் பிரபு வீட்டின் பின்புறம் பார்த்தார். அப்போது ராட்சத முதலைT வீட்டின் பின்புறம் பதுங்கி இரு படத்தில் காணலாம்.
பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வனத்துறையினர் விரைந்தனர் பின்னர் இது குறித்து அவர் உடனடியாக சிதம்பரம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். பின்பு அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமையில் வனச்சரக வசந்தபாஸ்கர் மற்றும் வனக்காப்பாளர்கள் விரைந்து சென்று வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த ராட்சத முத லையை பிடித்து அருகில் உள்ள ஏரியில் கொண்டு விட்டனர்.
வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த 10 அடி நீள ராட்சத முதலை... ஏரியில் விட்ட சிதம்பரம் வனத்துறையினர். pic.twitter.com/3xkj9wqcOy
— Indian Express Tamil (@IeTamil) September 29, 2025
பிடிபட்ட முதலை 10 அடி நீளமும், 400 கிலோ எடையும் இருந்தது . அருகில் உள்ள வாய்க்கால் அல்லது குளம், குட்டையில் இருந்து இரை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாபு ராஜேந்திரன் கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.