Advertisment

உ.பி. டூ பிகார்.. லாரி என்ஜினில் 98 கி.மீ பயணித்த மலைப் பாம்பு: தொழிலாளர்கள் வியப்பு: வைரல் வீடியோ

ராட்சத மலைப்பாம்பு இருந்த லாரி, உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் இருந்து பயணத்தைத் தொடங்கி, பீகாரில் உள்ள நர்கதியாகஞ்சில் முடிந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
python inside truck

உத்தரப் பிரதேசத்தில் சர்க்குகள் ஏற்றப்படும் போது லாரியின் என்ஜினுக்குள் மலைப்பாம்பு ஊர்ந்து சென்று மறைந்திருகொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். (Image source: @KiCainala/X)

உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகார் செல்லும் ஒரு லாரியில் என்ஜினுக்குள்  ராட்சத மலைப்பாம்பு ஒன்று மறைந்துகொண்டு 98 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. டிரக்கின் பானெட்டுக்குள் ராட்சத ஊர்வன சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பதிவின் படி, பயணம் முழுவதும் பாம்பு ஓட்டுநரின் கவனத்திற்கு வரவில்லை.

Advertisment

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பயணத்தை தொடங்கிய லாரி பிகாரில் உள்ள நர்கதியாகஞ்ச் என்ற இடத்துக்கு சென்றது. அங்கே லாரி நிறுத்தப்பட்டபோது, லாரியின் என்ஜின் பகுதியில் ராட்சத மலைப்பாம்பு சுருண்டு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். லாரி என்ஜின் பகுதியில் சுருண்டு படுத்திருக்கும் மலைப் பாம்பைப் பார்த்து தொழிலாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய டிரக் பீகாரில் உள்ள நர்கதியாகஞ்சில் முடிந்தது. மலைப்பாம்பை பார்க்க கூட்டம் கூடும் போது டிரக்கின் பானட்டில் மலைப்பாம்பு சுருண்டிருப்பதை காட்சிகள் காட்டுகிறது.

பிகார் மாநிலம், நர்கதியாகஞ்சில் கட்டுமானப் பணிகளுக்காக குஷிநகரில் கற்களை ஏற்றிக் கொண்டிருந்த போது லாரியின் என்ஜினுக்குள் பாம்பு ஊர்ந்து சென்று மறைந்து இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக லாரியில் கற்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisement

ஒரு எக்ஸ் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து எழுதுகையில், “ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உ.பி.யில் உள்ள குஷிநகரில் இருந்து புறப்பட்ட லாரியின் இன்ஜினில் மறைந்திருந்த மலைப்பாம்பு நர்கதியாகஞ்ச் பகுதியை அடைந்தது. தொழிலாளர்கள் லாரியில் இருந்து கற்களை இறக்கி பார்த்தபோது மலைப்பாம்பு காணப்பட்டது. அதன்பிறகு பானட்டைத் திறந்து வெளியே எடுத்தனர். மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வீடியோவைப் பாருங்கள்:


இந்த மலைப் பாம்பு பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாரியின் என்ஜினில் இருந்து அதை மீட்டனர். பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாம்பு தாக்கப்படவோ காயமடையவோ இல்லை.

கடந்த அக்டோபரில், உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள நெல் வயலில் ஏறக்குறைய 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று சறுக்கி விழும் வீடியோ வைரலானது. விவசாயிகள் மலைப்பாம்பை சாக்கு மூட்டை மற்றும் தடிமனான கயிறு மூலம் பிடித்து வயலில் விடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மலைப்பாம்பு தரையில் வைத்திருந்த போது கயிற்றில் சுற்றியது கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment