New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/Cow.jpg)
Viral Videos in tamil: தான் ஈன்றெடுக்காத குட்டிகளுக்கு பால் கொடுத்து - இன பேதமில்லை என வழிகாட்டுகிறது.
பசு மாடு ஒன்று சாலையில் உள்ள ஆட்டு குட்டிகளுக்கு
பால் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மு. எத்திராஜ் என்பவர் இந்த வீடியோவை தனது சுட்டுரையில் பத்விட்டார். அதில், " கருணை உள்ளம் இருக்கும் பசு மாடு என தெரிகிறது. தான் ஈன்றெடுக்காத
குட்டிகளுக்கு பால் கொடுத்து - இன பேதமில்லை என வழிகாட்டுகிறது" என்று தெரிவித்தார்.
கருணை உள்ளம் இருக்கும்
பசு மாடு என தெரிகிறது
தான் ஈன்றெடுக்காத
குட்டிகளுக்கு
பால் கொடுத்து - இன பேதமில்லை என வழிகாட்டுகிறது. pic.twitter.com/YQvkmVY9kX
— ????????மு.எத்திராஜ்.???????????????? (@Ethiraj25048473) February 23, 2021
ஐந்து அறிவு ஜீவன்களிடமும் கருணை இருக்கிறது
ஆறு அறிவு கொண்ட மனிதர்களிடத்தில் ? என்ற கேள்வியையும் மு. எத்திராஜ் முன்வைத்தார்.
வேற்றுமை பார்ப்பது மனித இனம். வேறுபடுத்திப் பார்க்காதவை மற்ற இனம் என்றும், இந்த மாதிரி மனிதர்களிடம் இல்லையே என்றும் வீடியோவைப் பார்த்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும் பிரிந்து வாழுக்கூடிய இன்றைய கால கட்டத்தில், இந்த வீடியோ மக்களிடம் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.