Advertisment

கின்னஸ் சாதனை: ஆந்திராவில் 5,500 ட்ரோன்கள் பறந்து வானத்தில் நடந்த அதிசயம்; வைரல் வீடியோ

ஆந்திராவில் ஒரே நேரத்தில் பறந்த 5,500 ட்ரோன்கள் விளக்கு வெளிச்சத்தின் மூலம், ட்ரோன், புத்தர், தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் கூடிய பூமி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல வடிவங்களை உருவாக்கி அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
drone viral

கிருஷ்ணா நதியின் புன்மை காட் என்ற இடத்தில் வானத்தில் ட்ரோன்கள் பறக்கச் செய்து விளக்கு வெளிச்சத்தில் வானத்தில் வர்ணஜாலம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது. (Image source: @ncbc/X)

அமராவதி ட்ரோன் உச்சி மாநாடு 2024-ன் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் ஆந்திரப் பிரதேசத்தின் மீது பறந்து, வானத்தில் ஒரு பெரிய வர்ணஜாலக் காட்சியாக அமைந்தது. இது உலகிலேயே "மிகப்பெரிய ட்ரோன் ஷோ" எனக் குறிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சி ஐந்து கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தது. இந்நிகழ்வு கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள புன்மை காட் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisment

இந்த ட்ரோன் ஷோ, மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. வானத்தில் ட்ரோன்களைப் பறக்கச் செய்து, அதன் விளக்கு வெளிச்சத்தில், மிகப்பெரிய விமானம் உருவாக்கம், மிகப்பெரிய கிரக உருவாக்கம், மிகப்பெரிய கொடி காட்சி மற்றும் மிகப்பெரிய வான்வழி லோகோ டிஸ்ப்ளே ஆகிய பிரிவுகளின் கீழ் உலக சாதனைகளை படைத்தது. ட்ரோன்கள் மூலம், புத்தர், தேசியக் கொடி, இந்திய வரைபடத்துடன் கூடிய பூமி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல வடிவங்களை உருவாக்கியது.

ஆந்திரா முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளைப் பகிர்ந்து எழுதினார், “இன்று மாலை, ஐந்து கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த ஒரு அற்புதமான ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்க்க, எனது அமராவதி மக்களுடன் சேர்ந்தேன். இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கும், திறமையான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனைத்து அமைப்பாளர்களையும் பங்கேற்பாளர்களையும் நான் வாழ்த்துகிறேன். ஆந்திரப் பிரதேசத்தில் ட்ரோன் சகாப்தத்தின் விடியலைக் குறிக்கும் அந்தி இது. எதிர்காலம் நமக்கு மேலே வட்டமிடுகிறது - அது பிரகாசமாக இருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.

1,62,000 பார்வைகளைப் பெற்ற இந்த வைரல் பதிவுக்கு பல சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்தனர், “நான் பழைய என்.சி.பி.என்-ன் பச்சை தளிர்களைப் பார்க்கிறேன், உங்களுக்கு பலம்’ என்று ஒரு பயனர் எழுதினார். 

“இன்று மாலை, ஐந்து கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த ஒரு அற்புதமான ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்க்க அமராவதி மக்களுடன் நான் சேர்ந்தேன். அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் திறமையான நிகழ்ச்சிகளுக்காகவும், இந்த நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காகவும் நான் வாழ்த்துகிறேன்” என்று மற்றொரு பயனர் கருத்து தெரிவித்தார்.

“இது ஒரு நம்பமுடியாத நிகழ்வு போல் தெரிகிறது! ஒரே நேரத்தில் ஐந்து கின்னஸ் சாதனைகளை எட்டுவது என்பது சிறிய சாதனையல்ல. இது அமராவதியில் உள்ள மக்களின் புதுமை மற்றும் ஆவிக்கு ஒரு சான்றாகும். மேலும், இது நிச்சயமாக உலகளவில் எதிர்கால ட்ரோன் காட்சிகளுக்கு உயர்ந்த இலக்கை அமைக்கிறது” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment