New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/15/T2rlBz3hMJOJghO7vNR8.jpg)
'தாஜ்மஹால்' மாடலில் வீடு: மனைவி மீதான தீராக் காதலை வெளிப்படுத்திய காதல் கணவர்!
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் வசிக்கும் ஆனந்த் பிரகாஷ் சோக்சி என்பவர்தான் மனைவிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும்விதமாக தாஜ்மஹால் போன்ற வீட்டை கட்டிக்கொடுத்து அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
'தாஜ்மஹால்' மாடலில் வீடு: மனைவி மீதான தீராக் காதலை வெளிப்படுத்திய காதல் கணவர்!
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் (Taj Mahal) உள்ளது.இதனை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவது உண்டு. மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) தாஜ்மஹாலை போல தொழிலதிபர் ஒருவர் தனது மனைவிக்காக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீட்டின் உரிமையாளர் வீடு குறித்து பேசியுள்ளார். இது எங்களுடைய 4 அறை கொண்ட தாஜ்மஹால். நாங்கள் இதில் வசிக்கிறோம். இந்த வீடு முழுவதுமாக மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மஹால் எந்த வடிவமைப்பில் இருக்குமோ அதே வடிவமைப்பில்தான் இந்த வீடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் 3-ல் 1 என்ற அளவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. தனது தாஜ்மஹால் வடிவிலாக வீட்டை குறித்து விளக்கும்போது அருகில் நிற்கும் இன்ஃப்ளூயன்சர், உங்கள் மனைவிக்காக இதை கட்டினீர்களா என கேட்கிறார். அதற்கு அவர், சிரித்துக் கொண்டே 100% எனது மனைவிக்காக கட்டப்பட்டதுதான் என்றார்.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் வசிக்கும் ஆனந்த் பிரகாஷ் என்பவர்தான் மனைவிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக தாஜ்மஹால் போன்ற வீடு ஒன்றை கட்டி கொடுத்து பலரையும் ஆச்சரியபட வைத்துள்ளார். 6 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு நுாலக அறைகளை கொண்ட இந்த வீடு சுமார் 8,100 சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ளது. வங்கதேச கைவினை கலைஞர்களை கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
மனைவியைத் தொல்லையாய் நினைக்கும் கணவர்களுக்கு மத்தியில் இவரின் இந்த தாஜ்மஹால் வீடு பரிசு இணையவாசிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.