Advertisment

அபிநந்தனின் ஒரே ஒரு பதில். ஒட்டு மொத்த இந்தியாவும் இன்னிக்கு இதைப் பத்தி தான் பேசுது!

அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வியந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அபிநந்தன் வைரல்

அபிநந்தன் வைரல்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது வந்தது. இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் 21 ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

Advertisment

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனை அமைதிக்கான  அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அபிநந்தனை கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் விடுவித்தது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு  ஒட்டு மொத்த மக்களுடன் திரண்டு வந்து மிகச் சிறந்த வரவேற்பு அளித்தனர். அபிநந்தனுக்கு தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உடல் மற்றும் மன ரீதியான பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தனிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் கொடுத்த அல்டிமேட் பதில் தான் இணையத்தில் நடந்த 3 நாட்களாக வைரலாகி வருகிறது.

அருவா மீசையுடன் சுற்றும் ஆண்கள்... அபினந்தனின் மீசை டிரெண்டாக என்ன காரணம்?

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என அபிநந்தன் கூறினார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வியந்தனர்.

வியந்தது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டுமில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் தான். ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் இந்த ஸ்டேட்டஸை தான் அதிகப்படியாக பகிர்ந்தனர்.

இதோ அதுக் குறித்து சிறப்பு தொகுப்பு...

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment