பானி பூரி நீண்ட காலமாக இந்தியர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் அதன் உலகளாவிய ரசிகர் பட்டாளம் வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு வைரல் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் முதன்முறையாக இந்த பிரபலமான இந்திய தெரு உணவை சுவைக்கும் காட்சிகளை அது காட்டியது - அவர்களின் எதிர்வினைகள் விலைமதிப்பற்றவை.
ஆங்கிலத்தில் படிக்க:
புடாபெஸ்டில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது பல்கலைக்கழகத்தின் சர்வதேச தினத்தின்போது இந்த கிளிப்பை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு துடிப்பான இந்திய உணவு ஸ்டால் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வீடியோவில் உள்ள உரையில், “POV: உங்கள் வெள்ளை நண்பர்களை முதன்முறையாக பானி பூரி சாப்பிட வைத்தீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேல் பூரி மற்றும் இந்திய இனிப்புகள் போன்ற பிற உணவுகளுடன், பானி பூரி தான் நிகழ்ச்சியின் நாயகனாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக, மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரிசையில் நின்று, காரமான மசித்த உருளைக்கிழங்கு மற்றும் புகழ்பெற்ற புதினா-புளி தண்ணீருடன் நிரப்பப்பட்ட மொறுமொறுப்பான பூரிகளை சுவைக்க தயாராக இருந்தனர். அவர்கள் பூரியை கடித்த நொடியில், அவர்களின் முகத்தில் பலவிதமான உணர்ச்சிகள் வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது - ஆரம்ப தயக்கம், ஆச்சரியம், சிரிப்பு மற்றும் இறுதியாக, தூய்மையான மகிழ்ச்சி.
அதன் தலைப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “பல்கலைக்கழகத்தின் சர்வதேச தினம் மிகவும் வேடிக்கையாக இருந்தது! - எங்கள் இந்திய ஸ்டாலில் பேல் பூரி முதல் இனிப்புகள் வரை அனைத்தும் இருந்தன, ஆனால் பானி பூரி? நிச்சயமாக அதுதான் முக்கிய கதாநாயகன். ஒவ்வொருவரும் அதை முதன்முறையாக சுவைப்பதைப் பார்ப்பது பியூர் கோல்ட், ஹாஹாஹா.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
கருத்துகள் பிரிவில், நிச்சயமாக, பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஒருவர் பகிர்ந்துள்ளார், “பானி பூரி மற்றும் மோமோ, எப்போதுமே, எங்குமே எனக்கு பிடித்தவை.. நான் ஒரு உணவுப் பிரியன் இல்லை, ஆனால், இந்த சுவையான உணவுகள் என்று வரும்போது, நான் யாரையும் வெல்ல முடியும்.” என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் கருத்து தெரிவித்தார், “பானி பூரி போன்ற தீவிரமான ஏக்கத்தை எந்த இந்திய சிற்றுண்டியும் உருவாக்குவதில்லை. ஒருமுறை உங்களுக்குப் பிடிக்கத் தொடங்கினால், அது மிகவும் போதை தரும்.” என்று தெரிவித்துள்ளார்.
சில பயனர்கள் காரமான சுவை பற்றி நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர், ஒருவர் எழுதினார், “நீங்கள் அதை லேசாகத்தான் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், ஏனென்றால், தெரு மட்ட காரத்தை வெள்ளையர்கள் தாங்க முடியாது.” என்று கூறியுள்ளார். மற்றொரு கருத்து அன்பை சரியாகச் சுருக்கமாகக் கூறியது: “யாராவது பானி பூரியை முயற்சி செய்து அதை விரும்புவதை நான் பார்க்கும் இந்த வீடியோக்களை நான் விரும்புகிறேன்... இந்த பிரபஞ்சத்தில் பானி பூரியை வெறுக்கும் யாரும் இருக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
இப்படி வெறித்தனமாக பானி பூரியை விரும்புபவர்கள் காரணமாக, நாக்பூரில் ஒரு தொழில் முனைவோர், அவர் ஒரு சாலையோர வியாபாரியும்கூட ஒரு அசாதாரண சலுகையை அறிமுகப்படுத்தினார்: ரூ.99,000 ஒருமுறை செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் பானி பூரி இலவசம். அதுதான் அந்த உணவுக்கான அர்ப்பணிப்பு ஆகும்.